செய்திகள் :

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

post image

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவர் சங்ருராம்(75). இவரின் மனைவி கடந்த ஆண்டு பலியான நிலையில் அவர் தனியாக வசித்து வந்திருக்கிறார். குழந்தை இல்லாததால் விவசாயத்தில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஆசை வந்திருக்கிறது. ஆனால் மறுமணம் செய்ய வேண்டாம் என்று அவருக்கு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், அதனையும் மீறி சங்ருராம் மறுமணம் செய்துள்ளார். தம்பதியினர் இருவரும் திருமணத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் பதிவு செய்து, பின்னர் உள்ளூர் கோயிலில் பாரம்பரிய சடங்குகளைச் செய்தனர். சங்ருராமை மணந்த மன்பவதிக்கும் இது இரண்டாவது திருமணம். மன்பவதிக்கு ஏற்கெனவே இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். குழந்தைகளை தான் பார்த்துக்கொள்வதாகவும், வீட்டுப் பொறுப்பை மன்பவதி ஏற்க வேண்டும் என்றும் சங்ருராம் தெரிவித்திருக்கிறார்.

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

பிறகு திருமணம் நடைபெற்ற இரவு அன்று இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். ஆனால் காலையில், சங்ருராமின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதியவரின் திடீர் மரணம் கிராமத்தில் ஊகங்களைத் கிளப்பியுள்ளது. தில்லியில் வசிக்கும் சங்ருராமின் மருமகன்கள் இறுதிச் சடங்குகளை நிறுத்தியுள்ளனர்.

தாங்கள் திரும்பும் வரை இறுதிச் சடங்குகள் நடக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே போலீஸார் முறையான விசாரணையைத் தொடங்குவார்களா அல்லது உடற்கூராய்வுக்கு உத்தரவிடுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சங்ருராமின் இறப்பிற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

A 75-year-old man in Uttar Pradesh's Jaunpur died unexpectedly the morning after marrying a 35-year-old woman, raising suspicion among his family members.

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

குஜராத்தில் அன்னை அம்பாஜி கோயில் கண்காட்சியில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குஜராத்தில் அன்னை அம்பாஜியில் நடைபெற்ற பத்ராவி பூர்ணிமா எனும் பிரமாண்டமான மாபெரும் கண்காட்சியில் 40 ல... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தின் உன்ஹெல் நாகேஷ்வர் நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புக்கு (ETFA) இடையே தடையற்ற வர்த்தக ... மேலும் பார்க்க

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.89 லட்சம் கோடி வரி வசூலாகிய உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

தங்கத்தை பாஜகவினர் பதுக்குவதால்தான் விலை அதிகரிப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.தங்கத்தின் விலை சமீபத்தில் அதிகளவில் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், குடிமக்களிடையே அதி... மேலும் பார்க்க

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

துபை சர்வதேச மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை தேசத் துரோகிகள் கண்டு ரசித்ததாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா்உத்தவ் தாக்கரே புதன்கிழமை தெரிவித்தார். இதுகுற... மேலும் பார்க்க