செய்திகள் :

Asia Cup: கோப்பையைப் பெற சூர்யகுமாருக்கு கண்டிஷன் - பாகிஸ்தான் அமைச்சர் சொன்னதென்ன?

post image

ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வியின் கைகளால் கோப்பையைப் பெற்றுக்கொள்ள மறுத்ததால் அவரே கோப்பையை எடுத்துச் சென்றார்.

கோப்பை இல்லாமல் வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி
கோப்பை இல்லாமல் வெற்றியைக் கொண்டாடிய இந்திய அணி

இந்தியா - பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளுக்குப் பிறகு ராஜாந்திர உறவுகள் பலவீனமாக உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தொடர் முழுவதும் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுழுக்குவதைத் தவிர்த்தார்.

தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வீரர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக்கொள்ளவில்லை. அதன் நீட்சியாகவே பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள மறுத்தார் சூர்யகுமார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப் 30) நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ கோப்பையை வழங்குவது பற்றிய விவகாரத்தை எழுப்பியது. பிசிசிஐ அதிகாரிகள் ராஜீவ் சுக்லா மற்றும் ஆஷிஷ் ஷெலர், கோப்பையை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கிளை அலுவலகத்தில் வைத்து, அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பலாம் என்றனர்.

ஆனால் இந்த முடிவுக்கு உடன்பட மறுத்தார் மொஹ்சின் நக்வி. "கோப்பையை வழங்குவது பற்றி பேச கூட்டம் நடைபெறவில்லை" எனக் கூறி பேச மறுத்தார்.

இறுதியாக பிசிசிஐ கோப்பையைப் பெற ஒரு வழியைக் கூறினார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்துக்கு வந்து சூர்யகுமார் யாதவ் தனது கைகளால் பெற்றுக்கொள்ளலாம் என்றார். "இந்திய அணி கோப்பையை விரும்பினால், கேப்டன் ACC அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்." எனக் கூறியுள்ளார்.

கோப்பையைத் தர நக்வி மறுத்ததால் இது குறித்து ஐசிசியில் புகார் அளிக்கப்படும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது.

Chahal: "அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று 2 மாதத்திலேயே தெரிந்துவிட்டது" - முன்னாள் மனைவி தனஸ்ரீ

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்கு... மேலும் பார்க்க

BCCI: 'மாத சம்பளம் இல்லை; பிசிசிஐ-யின் 37- வது தலைவர்'- யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?

பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிசிசிஐ-யின் 37-வது தலைவராக பதவியேற்றிற்கும் ... மேலும் பார்க்க

``கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டு வந்த முதல் கேப்டன் நீங்களா'' -பத்திரிகையாளர் கேள்வி; SKY பதிலென்ன?

துபாயில் நேற்று நடைபெற்ற (செப்டம்பர் 28) ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் ஆனது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றைப் போலவே இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்களிடம... மேலும் பார்க்க

Chris Woaks: "நேற்றுதான் அறிமுகமானதுபோல இருக்கிறது!" - 15 வருட சர்வதேச கரியர்; கிறிஸ் வோக்ஸ் ஓய்வு

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக... மேலும் பார்க்க

"பாகிஸ்தான் வீரர்களை வெறுக்கவில்லை; ஆனால்" - பஹல்காம் தாக்குதலில் மகனை இழந்த தந்தை சொல்வது என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.146 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங்கில் இறங்கிய இந்திய அணி 20 ரன்க... மேலும் பார்க்க

Ind vs Pak: ``அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்'' - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்?

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதைத் தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் க... மேலும் பார்க்க