செய்திகள் :

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

post image

மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாளான இன்று ’காந்தி ஜெயந்தி’ விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், காந்தி ஜெயந்தி குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”காந்தி ஜெயந்தி என்பது, மனித வரலாற்றின் போக்கை மாற்றியவரின் அசாதாரண வாழ்க்கைக்கு மரியாதை செலுத்துவதாகும். தைரியமும் எளிமையும் பெரும் மாற்றத்திற்கு கருவிகளாக மாற முடியும் என்பதை அவர் காட்டினார்.

சேவையும் இரக்கமும் மக்களை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியமான வழிகளாக உள்ளன என்று அவர் நம்பினார். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் எங்கள் பயணத்தில் அவரது பாதையை தொடர்ந்து பின்பற்றுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Let's keep to follow Gandhi's path! Modi

இதையும் படிக்க : காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

நாக்பூரில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டுள்ளார்.கடந்த 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் அமைப்ப... மேலும் பார்க்க

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதையடுத்... மேலும் பார்க்க

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

குஜராத்தில் அன்னை அம்பாஜி கோயில் கண்காட்சியில் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.குஜராத்தில் அன்னை அம்பாஜியில் நடைபெற்ற பத்ராவி பூர்ணிமா எனும் பிரமாண்டமான மாபெரும் கண்காட்சியில் 40 ல... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தின் உன்ஹெல் நாகேஷ்வர் நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!

உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவ... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு மூலம் 100 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு!

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்புக்கு (ETFA) இடையே தடையற்ற வர்த்தக ... மேலும் பார்க்க