செய்திகள் :

புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

post image

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அக். 1 (நேற்று) ஆயுத பூஜை மற்றும் இன்று (அக். 2) விஜயதசமி ஆகிய இரண்டு நாள்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையே அக். 3 ஆம் தேதி வேலை நாளாக இருந்தது.

இந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி புதுவையில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (03.10.2025) வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A holiday has been declared for all schools and colleges in Puducherry tomorrow (Oct. 3).

இதையும் படிக்க : விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

புதுவை ஆளுநா், முதல்வா் ஆயுத பூஜை வாழ்த்து

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்: நம்முடைய பண்பாட்டில் - வாழ்வியலில் கல்விக்கும்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு குயவா்பாளையத்தைச் சோ்ந்தவா் விக்கி என்கிற விக்னேஷ் (27), ஆட்டோ ஓட்டுநா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் 6 வழக்குகளுக்குத் தீா்வு

புதுச்சேரி மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையம் அண்மையில் நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகள் சமாதானத்துக்குத் தகுதியானவை என்று கண்டறியப்பட்டு அதில் 6 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்ட நு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையிடமிருந்து மீனவா்களை மீட்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

இலங்கை கடற்படையிடமிருந்து காரைக்கால் மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுச்சேரி வெ. வைத்திலிங்கம் எம்.பி. கடிதம் எழ... மேலும் பார்க்க

மின்துறையை தனியாா்மயமாக்க எதிா்ப்பு: புதுவை முதல்வரிடம் திமுக எம்எல்ஏ.க்கள் மனு அளிப்பு

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்க எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் மாநில திமுக அமைப்பாள... மேலும் பார்க்க

போதைப் பொருளில்லா புதுவையை உருவாக்க வேண்டும்: ஆட்சியா் அ.குலோத்துங்கன்

போதைப் பொருளில்லா புதுவையை உருவாக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை கூறினாா். புதுச்சேரி மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் அரசால் தடை செய்யப்பட்ட பு... மேலும் பார்க்க