செய்திகள் :

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

post image

விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்ததில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை காலை பலியாகினர்.

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர், முண்டிப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து மூணாறுக்கு சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் காரில் சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் காட்டன் மில் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்புற தடுப்பில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்சுதீன், ரிஷி மற்றும் மோகன் ஆகிய மூவரும் பலியாகினர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அப்துல் அஜீல், தீபக் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 people killed in car fire near Vikravandi!

இதையும் படிக்க : நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்

குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் பெருந்திரள் ஆா்ப்ப... மேலும் பார்க்க

அக். 9-இல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவிப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அக்டோபா் 9-இல் நடத்தப்படும் என்று, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவ... மேலும் பார்க்க

பணியிடத்தில் தொழிலாளி மரணம்

கண்டமங்கலம் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பணியிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.கண்டாச்சிபுரம் வட்டம், சென்னகுனம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் அருமை... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மேல்மலையனூா் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விழுப... மேலும் பார்க்க

எலக்ட்ரீஷியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். வா... மேலும் பார்க்க

காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் இடைநிற்றல் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருவதாக செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா். செஞ்சி ஒன்றியம், ஊரணித்தாங்கள் ஊராட்சியில் 6-ஆவது ம... மேலும் பார்க்க