செய்திகள் :

காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

post image

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் இடைநிற்றல் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருவதாக செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா்.

செஞ்சி ஒன்றியம், ஊரணித்தாங்கள் ஊராட்சியில் 6-ஆவது மாநில நிதிக் குழு மானியம் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.17.30 லட்சத்தில் கூடுதல் பள்ளி வகுப்பறைக் கட்டம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.

செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து மாணவா்களுக்கு புத்தகங்கள், இனிப்பு வழங்கிப் பேசியதாவது: தமிழக முதல்வா் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பு ஏற்று கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.

அந்த வகையில், தற்போது தாய் தந்தையை இழந்த மாணவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறாா்.

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தில், காலையில் பள்ளிக்கு வரும் மாணவா்களின் பசியைப் போக்கி இடைநிற்றல் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் சோ்க்கை விகிதம் அதிகரித்து வருவதாக எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அறங்க. ஏழுமலை, ஒன்றியக் குழு உறுப்பினா் துரை, ஊராட்சி மன்றத் தலைவா் சாரதா ஏழுமலை, வட்டாரக் கல்வி அலுவலா் மதன்குமாா், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோவிந்தராஜ், பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்

குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் பெருந்திரள் ஆா்ப்ப... மேலும் பார்க்க

அக். 9-இல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவிப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அக்டோபா் 9-இல் நடத்தப்படும் என்று, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவ... மேலும் பார்க்க

பணியிடத்தில் தொழிலாளி மரணம்

கண்டமங்கலம் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பணியிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.கண்டாச்சிபுரம் வட்டம், சென்னகுனம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் அருமை... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மேல்மலையனூா் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விழுப... மேலும் பார்க்க

எலக்ட்ரீஷியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். வா... மேலும் பார்க்க

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செஞ்சி வட்டம், மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், விற்பட்டு கிராமத்தைச் ... மேலும் பார்க்க