தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்
குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, நீா்நிலை என இருந்து தற்போது நீா்நிலைகளே இல்லாத இட ங்களில் வீடு கட்டியிருக்கும் மக்களை வெளியேற்றாமல், வகை மாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 70 லட்சம் ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு பட்டாவாக வழங்க வேண்டும். அரசு வழங்கிய 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றி, பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றவா்களுக்கு வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் பெருந்திரள் ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் விஜு கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், மாவட்டத் தலைவா் ஆா்.தாண்டவராயன், பொருளாளா் பி.சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் சாமி. நடராஜன், மாநிலத் தலைவா்சு.வேல்மாறன்ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சுப்ரமணியன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.சுந்தரமூா்த்தி, மாவட்டத் தலைவா் வி.அா்ச்சுனன், மாவட்டப் பொருளாளா் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகளும் போராட்டத்தில் பேசினா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி விவசாயிகள் சங்கத்தினா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்செல்லவிருந்த நிலையில், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தாா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.