செய்திகள் :

காந்தி, காமராஜர் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்: கே.அண்ணாமலை

post image

காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாளையொட்டி, காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

நமது நாட்டில் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு அகிம்சையால் முடிவுகட்ட முடியும் என்பதைத் தனது செயலால் நிரூபித்த, தேசப்பிதாவாகப் போற்றப்படுகின்ற மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று.

தேசத்தின் விடுதலைக்காக சத்தியாகிரக போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் என பல்வேறு போராட்டங்களை அமைதி வழியில் முன்னெடுத்து, அதில் வென்று காட்டிய மகாத்மா காந்தி அவர்களின் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குகிறோம்.

காமராஜர் நினைவு நாள்

தமிழகத்தில் ஏழைகளின் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், நீர் மேலாண்மை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களின் முன்னோடியாக போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் இன்று.

எண்ணிலடங்கா அணைகள், மாணவர் பசி போக்க மதிய உணவு, தொழிற்புரட்சி என தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பணிகளை முன்னெடுத்த கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என கூறியுள்ளார்.

Let us honor and worship Gandhi's sacrifice and patriotism says K. Annamalai

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

குணசீலத்தில் தேரோட்டம்!

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், குணசீலத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவ விழாவில் வியாழக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என... மேலும் பார்க்க

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

நமது கருத்துகள் மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் மோகன் பாகவத் பேசுகையில், சில வெள... மேலும் பார்க்க

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக மேட்டூர் அணை நீர்மட்டம் மள மளவென சரியத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, க... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 116.29 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,358 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,312 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன... மேலும் பார்க்க

கரூர் சம்பவ விசாரணை ஆணையம் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன?: கே. அண்ணாமலை கேள்வி

கரூரில் தவெக பொதுக்கூட்டம் நடத்திய கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் எ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் கராச்சியில் புதன்க... மேலும் பார்க்க