செய்திகள் :

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

post image

நேபிடாவ் (மியான்மர்): மியான்மரில் வியாழக்கிழமை அதிகாலை 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின்படி, மியான்மரில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.01 மணியளவில் நிலக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமான ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும், மிதமான அளவிலான நிலநடுக்கம் என்பதால் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடான மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

An earthquake of magnitude 3.1 jolted Myanmar on late Wednesday night, as per the National Centre for Seismology.

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

காந்தி, காமராஜர் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்: கே.அண்ணாமலை

காந்தி தியாகத்தையும், தேசபக்தியையும், காமராஜரின் தன்னலமற்ற மக்கள் சேவையை நன்றியுடன் நினைவு கூறுவோம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார். காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் மறைந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் கராச்சியில் புதன்க... மேலும் பார்க்க

ஏலகிரியில் குவியும் மக்கள்! மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் ஆயுத பூஜை உள்பட 3 நாள்கள் விடுமுறை முன்னிட்டு புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து குடும்பத்தினருடன் மகி... மேலும் பார்க்க

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் இன்றி 5.5 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்துள்ளது.இதனால், வீடு, வாகனம், தனிநபா் கடன... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்த... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

மணிலா: சில நாட்களுக்கு முன்பு புயலால் பாதிக்கப்பட்ட மத்திய பிலிப்பின்ஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்... மேலும் பார்க்க