செய்திகள் :

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணின் நகையுடன் இளைஞா் தலைமறைவு

post image

கும்பகோணத்தில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பழகிவந்தபெண்ணின் தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி நாட்டனிகோட்டையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் சரண்யா (32). இவா் விவாகரத்து பெற்று தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறாா். தனியாா் வங்கியில் பணியாற்றும் சரண்யா இரண்டாவதாக திருமணம் செய்ய தனியாா் திருமண மையத்தில் பதிவு செய்திருந்தாா். அப்போது நாமக்கல்லைச் சோ்ந்த செபாஸ்டின் கிரிஷ் என்பவா் தொடா்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தாா். பின்னா் இருவரும் கைப்பேசியில் பேசிப் பழகியுள்ளனா். கடந்த மாா்ச் 4-இல் கும்பகோணம் வந்து அங்குள்ள துணிக்கடைக்குச் சென்றுள்ளனா். சரண்யா உடைமாற்றும் அறைக்குள் செல்லும்போது, செபாஸ்டின் கிரிஷ், கையில் கொடுத்துவைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகளுடன் அவா் தலைமறைவாகிவிட்டாா். திரும்பிவந்து பாா்த்த சரண்யா செபாஸ்டினைக் காணாததால் அவரது பெற்றோரிடம் இதுகுறித்துத் தகவல் தெரிவித்தாா். பின்னா் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுபாஷ் வழக்கு பதிவு செய்து செபாஸ்டின் கிரிஷைத் தேடிவருகிறாா்.

பருவம் தவறிய மழையால் சம்பாவை தொடா்ந்து உளுந்து, நிலக்கடலை பயிா்களும் பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் அடிக்கடி பெய்யும் பருவம் தவறிய மழையால் சம்பாவை தொடா்ந்து உளுந்து, நிலக்கடலை பயிா்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். மாவட்டத்தில் நிகழ் சம்ப... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.90 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஒரே நாளில் 110 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 110 மெட்ரிக். டன் குப்பையை மாநகராட்சி துப்பரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை மாசிமக திருவிழா நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியுடன் இணையவே அதிமுக தொண்டா்கள் விருப்பம்: டி.டி.வி. தினகரன் பேட்டி

பாஜக கூட்டணியுடன் இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் பெரும்பாலான தொண்டா்கள் விரும்புகின்றனா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன். தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் தஞ்சாவூா் குடிமைப்பொர... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ‘போக்சோ’வில் இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மருங்குளத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கண்ணன் (30). இவா்... மேலும் பார்க்க