செய்திகள் :

திரைப்படம், நாடகம் மூலம் தீவிரவாதத்தை எதிர்க்கும் பாகிஸ்தான்!

post image

தீவிரவாதத்தை திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் பொது மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உயர்தர ஆலோசணைக் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பலூசிஸ்தானில் நடைபெற்ற ரயில் கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பற்றியும் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை பாரம்பரிய மற்றும் நவீன (டிஜிட்டல்) ஊடகங்கள் வழியாக எதிர்க்கொள்ளும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டில் பரப்பப்படும் தீவிரவாதக் கொள்கைகள் மற்றும் கதைகளை எதிர்க்க தேசிய நடவடிக்கை திட்டத்தின் மூலம் மக்களிடையே நாட்டுப் பற்றைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்துடன், பாகிஸ்தானின் மாகாணங்களில் ஒருங்கிணைப்பை உறுதி செய்து தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வகையிலான பிரச்சாரங்கள் பரவுவதைத் தடுக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், தீவிரவாத பிரச்சாரத்தை எதிர்கொள்ள தேசிய கருப்பொருள்களை உள்ளடக்கிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் உருவாக்கி அதன் வழியாகத் அந்நாட்டு இளம் தலைமுறையினருக்கு இடையே நாட்டுப் பற்றை உண்டாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெளியாகும் தேசியவாத திரைப்படங்களை ஊக்குவிக்கவும் அங்கு பரப்பப்படும் பொய்யான தகவல்களை எதிர்க்கொண்டு சரியான தகவல்களை வழங்கவும் நவீன ஊடகங்களை பயன்படுத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா ஆகிய மாகாணங்களில் அதிகரித்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த புதிய முயற்சியானது மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:213 ஆப்கன் அகதிகளைத் தாயகம் கடத்திய பாகிஸ்தான்!

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க