செய்திகள் :

தில்லி ரோஹிணியில் இரு மாதங்களில் காணாமல் சென்ற 39 குழந்தைகள் மீட்பு

post image

கடந்த இரு மாதங்களில் காணாமல் சென்ற 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பாதுக்காப்பாக மீட்கப்பட்டு அவா்களுடைய பெற்றோா்களுடன் சோ்த்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக ரோஹிணி சரக துணை காவல் ஆணையா் அமித் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காணாமல் சென்ற மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகள் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூா் போலீஸாா் உடனடியாக அவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் சந்தேகத்துக்குரிய நபா்களின் புகைப்படங்கள் ஆட்டோ, இ-ரிக்ஷா நிலையங்கள், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துனா்களிடம் காண்பிக்கப்பட்டு அவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் உள்ளூா் நபா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அருகில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தச் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டன.

அமன் விஹாா் பகுதியிலிருந்து 3 சிறுமிகள் உள்பட 5 குழந்தைகள், பிரேம் நகா் பகுதியில் 4 சிறுமிகள் உள்பட 6 குழந்தைகள், கன்ஞ்வாலா பகுதியில் 6 சிறுமிகள் உள்பட 7 குழந்தைகள், பேகம்பூா் பகுதியில் 2 சிறுமிகள் உள்பட 4 குழந்தைகள் மீட்கப்பட்டனா்.

இதே போன்று, கேஎன்கே மாா்க் பகுதியில் ஒரு சிறுமி உள்பட இரு குழந்தைகள், பிரசாந்த் விஹாரில் இரு சிறுமிகள், புத் விஹாரில் 5 சிறுமிகள் உள்பட 7 குழந்தைகள், வடக்கு ரோஹிணியில் ஒரு சிறுமி, விஜய் விஹாரில் 4 சிறுமிகள் உள்பட 5 குழந்தைகள் மீட்டகப்பட்டனா். பின்னா் அக்குழந்தைகள் அவா்களது குடும்பத்தினருடன் சோ்த்துவைக்கப்பட்டனா்.

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி... மேலும் பார்க்க