செய்திகள் :

தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!

post image

தில்லியில் இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாஜக தலைமையகத்தைவிட மிகப் பெரியதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆர்எஸ்எஸ் அலுவலகம் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

தில்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கரோனா பெருந்தொற்றால் கட்டடப் பணிகள் தாமதமான நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

3.75 ஏக்கர் நிலத்தில், 5 லட்சம் சதுர அடி பரப்பளவில், 12 தளங்களுடன் 3 கோபுரங்கள் கொண்ட கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் சுமார் 75,000 பேரிடம் நன்கொடையாக பெறப்பட்ட பணத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : நேட்டோவில் உக்ரைன் இணைவது சாத்தியமில்லை: டிரம்ப்

இந்த கட்டடத்தில் அமைந்துள்ள பிரதான கலையரங்கத்துக்கு, அயோத்தி கோயில் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களின் ஒருவரான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தில் அமைந்துள்ள நூலகத்தில் 8,500 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், 5 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவ உதவி மையமும் இந்த கட்டடத்தில் செயல்படவுள்ளது.

மேலும், ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான இடம் என 300 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தை வருகின்ற 19 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் திறந்துவைக்கவுள்ளார்.

கணவனுடன் சண்டை: வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியரை திருமணம் செய்த மனைவி!

கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவரது மனைவிக்கு பிடிக்காததால், தமது வீட்டுக்கு வட்டி வசூலிக்க வரும் நிதி நிறுவன ஊழியரை அந்த பெண்மணி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. பிகார் மாநிலம் ... மேலும் பார்க்க

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில்... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.... மேலும் பார்க்க