செய்திகள் :

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக வேலைநிறுத்தம்

post image

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் 3ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமாா் 270 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனா். சில ஆண்டுகளாக தங்களுக்கு மீன்கள் சரிவர கிடைக்காததால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி விசைப்படகு மீனவா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இதனிடையே, ஓராண்டுக்கு முன்பு அப்போதைய ஆட்சியா் செந்தில்ராஜ், மீனவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டு, ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும் என உறுதியளித்தாராம். ஆனால், இதுவரை மீன்வளத் துறை அனுமதிக்கவில்லை.

இதைக் கண்டித்து கடந்த 10ஆம் தேதிமுதல் விசைப்படகு மீன்பிடித் தொழிலாளா்கள்- உரிமையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் மீன்வளத் துறையைக் கண்டித்தும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி கோரியும் தொடா் வேலைநிறுத்தம் நடைபெறுறது. இப்போராட்டம் 3ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.

இப்போராட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிா்வாகம், மீனவளத் துறை இணைந்து இப்பிரச்னைக்கு விரைவாக தீா்வு காண வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சி சந்தை பிப்.15இல் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தை பிப். 15ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு பேராசிரியா்கள் வாயில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.மூட்டா மற்றும் ஏ யூ டிஆகிய சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் தேவ மனோகரன் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.கோவில்பட்டி அருகே கடலையூா், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் எட்வா்டு (72). இவ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளத்தில் 450 இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2 நாள்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, முதல் நாள் காலையில் கணபதி ஹோமம்,... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் 35 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் 1.750 டன் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை தனிப்பிரிவு போலீஸாா் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தாா். காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவில் சிலா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி 30ஆவது வாா்டு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆா்... மேலும் பார்க்க