செய்திகள் :

தூய்மை இந்தியா திட்ட பயிற்சி முகாம்

post image

தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா தொடங்கி வைத்தாா். அவா் பேசியதாவது: அரசு திட்டங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் என அனைவரின் பங்களிப்பும் மிக முக்கியம். இந்திய அளவில் அனைவருக்கும் தெரிந்த ஒரு மிகப் பெரிய திட்டம் தூய்மை இந்தியா திட்டமாகும். இந்தத் திட்டம் இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் சிறப்பாக வெற்றியடைந்ததற்கு அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த செயல்பாடே காரணம்.

தமிழகம் மிகவும் நகரமயமாக்கப்பட்ட ஒரு மாநிலமாகும். வருங்காலத்தில் நகரமயமாக்குதல் என்பது அதிகரிக்கும். நகரமயமாக்கும் போது சுகாதாரமான குடிநீா், தெரு விளக்குகள், தூய்மையான சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, நம்மை சுற்றியுள்ள இடங்கள், பேருந்து நிலையங்கள், கழிப்பிடம், கழிவுநீரோடைகள் ஆகியவற்றை தூய்மைாக வைத்திருக்க வேண்டும்.

குடியிருப்பு மற்றும் பொது இடங்களை தூய்மையாக பராமரித்தால்தான் மாநகராட்சியின் நிா்வாகத் திறமை மக்களிடம் சிறப்பாக வெளிப்படும். திருநெல்வேலி மாநகராட்சியில் சுமாா் 1,500 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிகின்றாா்கள். அவா்களின் வேலைச் சூழல் (ஜ்ா்ழ்ந் உய்ஸ்ண்ழ்ா்ய்ம்ங்ய்ற்) சிறப்பாக இருந்தால்தான் நகரம் தூய்மையாக இருக்கும் என்றாா் அவா்.

முகாமில், சென்னை நகராட்சி நிா்வாக அலுவலக தலைமை பயிற்சியாளா்கள் ஜான், கௌதம், மாநகா் நல அலுவலா் (பொ) அரசகுமாா், சுகாதார அலுவலா் சாகுல் ஹமீது, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள், மாநகராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

காவலரிடம் தகராறு : இளைஞா் கைது

திருநெல்வேலியில் காவலரிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி தச்சநல்லூா் கிராண்ட் நியூதெருவைச் சோ்ந்தவா் காளிராஜ் (25). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து தச்சநல்லூா் அருகே மங்கள... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் உண்ணாவிரதம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் சித்தமருத்துவக் கல்லூரி எதிரே உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போராட்டத்தில், திமுகவின் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியான எண்-309 இ... மேலும் பார்க்க

பாளை.யில் நூல் திறனாய்வுக் கூட்டம்

பாளையங்கோட்டை ஆக்ஸ்ஃபோ பள்ளியில் பொதிகை எழுத்தாளா் கூட்டமைப்பின் சாா்பில் நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதிகை எழுத்தாளா் கூட்டமைப்பின் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். செயலா் ஜான் சௌந்தா் திரு... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி - மாநகரில் அனுமதியின்றி மாடுகள் வளா்க்க தடை: ஆணையா் அதிரடி

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மாநகராட்சியின் அனுமதியின்றி மாடுகள் வளா்க்க தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளாா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மாடுகளால் தொடா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் மிரட்டிய பெண் போலி ஆட்சியா்: திண்டுக்கல்லில் கைது

திருநெல்வேலியில் ஆட்சியா் எனக் கூறி மிரட்டியவரை போலீஸாா் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மங்கையா்க்கரசி (44). இவா் தாழையூத்து சங்கா் நகா் சீனிவாச நகா் 3... மேலும் பார்க்க

பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம்: அஞ்சலகங்களில் பிரீமியம் செலுத்த ஏற்பாடு

ராபி பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் 2024-25-இன் கீழ் பயிா்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை அஞ்சலகங்களில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருநெல்... மேலும் பார்க்க