செய்திகள் :

தென் கொரியா: தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ!

post image

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் இன்று (பிப்.1) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் 3 வது தளத்தில் இன்று (பிப்.1) காலை 8.40 மணியளவில் (கொரியா மணிக்கணக்கில்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த தீயானது 4வது தளத்திற்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மதியம் 12.30 மணியளவில் (கொரியா மணிக்கணக்கில்) தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில் அருங்காட்சியகக் கட்டடத்திலிருந்து கருநிற புகை வெளியாவது பதிவாகியுள்ளது. கட்டடத்தினுள் சிக்கியிருந்த அருங்காட்சியக பணியாளர்கள் 4 பேரும் பத்திரமாக மிட்கப்பட்டனர்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

மேலும், அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதினால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், மீட்புப் பணிக்காக உள்ளே சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் கொரிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகத்தில் 1443 ஆம் ஆண்டைச் சேர்ந்த கொரிய மொழியின் அரிதான எழுத்துக்கள் பொறித்த பழமையான பொருள்கள் பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி: ‘சவதீகா ரீலோடட்’ பாடல் விடியோ வெளியானது!

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் ’சவதீகா’ பாடலின் ரீலோடட் வெர்ஷன் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ஆக்‌ஷன் கதைக்களத்துடன் உருவ... மேலும் பார்க்க

வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!

அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் வெனிசுலா அதிபர் மதுரோவை சந்தித்து பேசிய பின்னர் அந்நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 6 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெனிசுலாவி... மேலும் பார்க்க

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா காலமானார்

புதுதில்லி: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா(79) சனிக்கிழமை காலமானார் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இதனை தெரிவித்துள்ளார். சாவ்லா மூளை அறுவை சிகிச்சைக்காக தில்லியில... மேலும் பார்க்க

பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கேஜரிவால்!

தில்லி அரசின் நலத்திட்டங்களைப் பாதுகாக்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆதரவாளர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கைவிடுத்துள்ளார்.தலைநகர் தி... மேலும் பார்க்க

அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

புதுதில்லி: அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா... மேலும் பார்க்க

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று... மேலும் பார்க்க