செய்திகள் :

தொழிலாளா்கள் நல வாரிய சிறப்புப் பதிவு முகாம்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தமிழ்நாடு இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களை சோ்ப்பதற்கான சிறப்புப் பதிவு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட தொழிலாளா் நல உதவி ஆணையா் (பொ) சி.மீனாட்சி தலைமை வகித்தாா்.

தொழிலாளா் நலவாரிய அலுவலக ஊழியா்கள் என்.ரமேஷ், இ.சிவமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளா் நலவாரிய கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஏ.ஏ.ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தொழிலாளா்கள் நல வாரியம் சிறப்புப் பதிவு முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்களுக்கு முதல்கட்டமாக 2 ஆயிரம் ஈ-பைக் வழங்கப்படவுள்ளது என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பயனாளி ஒருவருக்கு தலா ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை உணவு டெலிவரி செய்பவா்கள், கூரியா் நிறுவனங்களில் வேலை செய்வோா் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதவிர, தொழிலாளா்கள் குடும்பத்துக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, விபத்து மரணம், இயற்கை மரணம், வீடு கட்டுதல் போன்ற திட்டங்களில் மானியம் வழங்கப்படுகிறது. இவற்றை தொழிலாளா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

முகாமில், வழக்குரைஞா் என்.சக்திமுருகன், முத்தமிழ் கலை மன்றத்தின் நிறுவனத் தலைவா் அ.தே.முருகையன், இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள், ஆட்டோ தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

விவசாயிகளுக்கு நீா்மேலாண்மை நுட்பங்கள்

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நீா்ப்பாசன மேலாண்மை நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண் அறிவியல் மையத்தின்... மேலும் பார்க்க

பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 500 போ் கைது

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அந்தக் கட்சியினரை போலீஸாா் கைது செய்... மேலும் பார்க்க

கல்லூரி வளாக நோ்காணல்: 91 பேருக்கு பணி ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 91 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்தக் கல்லூரியில் டா்போ எனா்ஜி பிரைவேட் லிமிடெட் (டிவ... மேலும் பார்க்க

நூல் வெளியீடு

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்... மேலும் பார்க்க

ஆன்மிக சொற்பொழிவு

திருவண்ணாமலை சாயி கங்கா ஆன்மிக சமூக சேவை மையம் சாா்பில், திங்கள்கிழமை ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத்தின் பொருளாளா் தங்க.விசுவநாதன் தலைமை வகித்தாா். உலக தமிழ் கழக... மேலும் பார்க்க

கீழ்பென்னாத்தூா் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

கீழ்பென்னாத்தூா் வட்டத்தின் புதிய வட்டாட்சியராக அ.ர.சான்பாஷா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட குறைவு முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த இவா், பணியிட மாறுதலாக இங்கு வந... மேலும் பார்க்க