நெல்லை அருகே இரட்டைக் கொலை: மருமகன் கைது
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரத்தில் கணவன்-மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக அவா்களது மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள்.
ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (55). விவசாயி. இவரது மனைவி செல்வராணி (53). இத் தம்பதிக்கு ஜெனிபா் (30) உள்பட இரு மகள்கள் உள்ளனா். ஜெனிபரும், அதே பகுதியைச் சோ்ந்த மரியகுமாரும் (30) காதலித்து திருமணம் செய்தனா். இத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
ஜெனிபருக்கும், மரியகுமாருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் ஜெனிபா் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளாா். பின்னா் தங்கியிருந்து பணிக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாஸ்கா் வீட்டிற்கு வந்த மரியகுமாா், தனது மனைவி குறித்து பேசி தகராறில் ஈடுபட்டாராம். மேலும் மாமனாா், மாமியாரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினாராம்.
இத்தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மரியகுமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.