செய்திகள் :

பல மொழி சின்னதிரைகளில் நடிப்பது சிறந்த அனுபவம்: செளந்தர்யா ரெட்டி!

post image

பல மொழிகளின் சின்னதிரை தொடர்களில் நடிப்பது சிறந்த அனுபவம் என நடிகை செளந்தர்யா ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் பிறந்திருந்தாலும் கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழ் மொழித் தொடர்களிலும் செளர்ந்தர்யா முன்னணி நாயகியாக நடித்துவருகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க தொடரின் மூலம் தமிழ் சின்னதிரை ரசிகர்கள் மத்தியில் பிரபலானவர் செளந்தர்யா ரெட்டி. இத்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெட்டி மேளம் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். ஜனவரி 20 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், திங்கள் முதல் வெள்ளிவரை 7.30 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.

பிற மொழித் தொடரில் செளர்ந்தர்யா

இதற்கு முன்பு தெலுங்கு மொழியில், பாடமதி சந்தியாராகம் தொடரில் நடித்திருந்தார். அந்தத் தொடரும் தெலுங்கு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிலையில், பல்வேறு மொழிகளில் நடிப்பது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ள செளந்தர்யா ரெட்டி தெரிவித்ததாவது,

''நான் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவள். இருந்தாலும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவள். அதனால் கன்னட மொழி எனக்கு சரளமாகத் தெரியும். இதன் காரணமாக எனக்கு முதன்முதலில் கன்னடத்தில் ராஜி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அத்தொடரின் வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் மீனாட்சி பொண்ணுங்க தொடரிலும் தெலுங்கில் பாடமதி சந்தியாராகம் தொடரிலும் ஒரே சமயத்தில் நடித்தேன். வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.

கெட்டி மேளம் தொடரில் செளர்ந்தர்யா

மூன்றுமொழித் தொடர்களிலும் முன்னணி நாயகியாக மாறியபிறகு, 'படவாய்ப்புகள் குறித்துப் பேசிய செளந்தர்யா, '

'நான் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என நினைப்பவள் அல்ல. வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி என் திறமையை வளர்த்துக்கொள்பவள். அதனால் வெள்ளித்திரையில் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன். அப்படித்தான் சின்னதிரையிலும் நுழைந்தேன். சின்னதிரை வாய்ப்பு வந்தது. அதனை நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டேன். அதன் விளைவு இப்போது எனக்குத் தெரிகிறது. உழைப்புக்கான ஊதியம் எங்கிருந்தாலும் கிடைக்கும்'' எனக் கூறினார்.

இதையும் படிக்க | மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!

“உங்கள் மன அமைதியைக் குலைத்ததற்கு…” ராகுல் காந்தியின் பேச்சால் பரபரப்பு!

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?679e240dc9afcbb7ca5dad88/67a0bcc631cb129377abbbfc/thumbnail-1-... மேலும் பார்க்க

மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிரு... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!

நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் சின்னதிரை நடிகையுமான ஜோவிதா லிவிங்ஸ்டன், மெளனம் பேசியதே தொடரில் இருந்து விலகியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த அவர், தற்போது அத... மேலும் பார்க்க

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்.10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்தனர்.தஞ்சாவ... மேலும் பார்க்க

ஐயாறப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா!

பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஸ்ரீ... மேலும் பார்க்க

இன்று யோகம் யாருக்கு!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.03-02-2025திங்கட்கிழமைமேஷம்:இன்று பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்க... மேலும் பார்க்க