செய்திகள் :

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!

post image
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால், அதன் மீதே குண்டுகள் விழுந்தன. இதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்களை பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டிருந்தார் எஸ்.பி விவேகானந்த சுக்லா.

இந்த நிலையில், சிப்காட் பகுதியைச் சேர்ந்த பரத், விஷால், ஹரி ஆகிய 3 இளைஞர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தேடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான டீம் விரைந்தது.

சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞன்

சென்னையில் பதுங்கியிருந்த 3 பேரையும் சுற்றிவளைத்து போலீஸார் கைதுசெய்தனர். அப்போது, ஹரி மறைத்துவைத்திருந்த கத்தியால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிஓட முயன்றிருக்கிறார். இதில் எஸ்.ஐ ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, தற்காப்புக்காக போலீஸார் ஹரியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்திருக்கின்றனர். இதில் ஹரிக்கு கால் முட்டியில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஹரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் என்ன நோக்கத்திற்காக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள் என விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞன் ஹரி, சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரவுடி தமிழரசனின் மகன் எனவும் தெரியவந்திருக்கிறது.

மும்பையை சுற்றிப்பார்க்க வந்த பெண்; இடமில்லாமல் ரயிலில் உறங்கிய போது பாலியல் வன்கொடுமை..

மும்பையில் தாதர், பாந்த்ரா, மும்பை சென்ட்ரல், குர்லா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் போன்ற இடங்களில் ரயில்வே டெர்மினஸ் இருக்கிறது. இதில், பாந்த்ரா ரயில்வே டெர்மினஸில் நிறுத்தப்பட்டு இருந்த ரயிலில் உற... மேலும் பார்க்க

வேங்கை வயல் வழக்கில் CBCID குற்றப்பத்திரிகை ஏற்பு; வேறு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்..

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாகவும், அதனை ஏற்கக் கூடாது எனவும் புகார் தரரான கனகராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் ... மேலும் பார்க்க

``மிரட்டல், சித்ரவதையால் தளர்ந்துவிட்டேன்..'' -உறவின் போது காதலனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் இக்பால்(32). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்தது. இந்நிலையில், இக்பால் அவரது வீட்டிற்கு அருகில் பிணமாக கிடந்தது ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `முட்டைப் பொரியலில் விஷம் வச்சுட்டேன்' - காதலை கைவிட மறுத்த மகள்; தாய் செய்த கொடூரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அதே பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி கொடுத்த முகமூடி ஆசாமிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் பெட்ரோல்... மேலும் பார்க்க

மதுபோதை ஒழிப்பு பேரணிக்குள் நுழைந்த கார்; போதையில் கார் ஓட்டிய தவெக முன்னாள் நிர்வாகி மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.போட்டி தொடங்கியதும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு ஓடினர்.... மேலும் பார்க்க