பள்ளப்பட்டி அருகே சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு
அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சாா்பில் தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி சாலை வரை சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்புத் திட்டம் 2024- 25 ஆம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் கரூா் கோட்டம் அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி வரையிலான பணியில் பள்ளபட்டி அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் சிறு சிறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இப்பணிகளை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் வினோத்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் உடனிருந்தனா்.