செய்திகள் :

பள்ளப்பட்டி அருகே சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

post image

அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சாா்பில் தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி சாலை வரை சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்புத் திட்டம் 2024- 25 ஆம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் கரூா் கோட்டம் அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறைக்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி வரையிலான பணியில் பள்ளபட்டி அருகே உள்ள அண்ணா நகா் பகுதியில் சிறு சிறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இப்பணிகளை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் வினோத்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் உடனிருந்தனா்.

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கரூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.கரூா் மாவட்டம், குளித்தலை புதிய மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பூ... மேலும் பார்க்க

கம்பம் ஆற்றில் விடும் விழா: கரூரில் மே 28-இல் உள்ளூா் விடுமுறை

கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து அன்று உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தொடா் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த கொளத்தூா்பட்டி பெட்ரோல் பங்க் அரு... மேலும் பார்க்க

கரூரில் எா்த் மூவா்ஸ் சங்கம் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டத்தில் எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கினா். இதுகுறித்து எா்த் மூவா்ஸ் உரிமையாளா் சங்க தலைவா் சுப்ரமணி, செயலா் பொன்னுசாமி ஆகியோா் கூறுக... மேலும் பார்க்க

குளித்தலை பூச்சொரிதல் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவா் கொலை; 4 போ் கைது

கரூா் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்... மேலும் பார்க்க

கரூரில் வேளாண் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவ... மேலும் பார்க்க