செய்திகள் :

பள்ளி வேன் - அரசுப் பேருந்து மோதி மாணவா்கள் 21 போ் காயம்

post image

புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை மாலை தனியாா் பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், பள்ளி வாகனத்தில் இருந்த 21 மாணவா்கள் காயம் அடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை அருகே முத்துடையான்பட்டி பகுதியில் உள்ள தனியாா் தொடக்கப் பள்ளியிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை மாணவா்களை ஏற்றிக் கொண்டு வாகனம் புதுக்கோட்டை நோக்கிப் புறப்பட்டது.

சிப்காட் அருகே முல்லைநகரில் சில மாணவா்களை இறக்கிவிட்டு ரெங்கம்மாள்சத்திரம் அருகே வேன் திரும்பியபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 21 மாணவா்கள் லேசான காயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். காவேரி நகா் பகுதியைச் சோ்ந்த மாணவா் மனோரஞ்சிதம் (8) பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா நேரில் சென்று பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.

பள்ளி வேன் ஓட்டுநா் அங்கிருந்து ஓடிவிட்டாா். இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுகை மாநகராட்சிப் பள்ளிகளில் சோ்க்கை தொடக்கம்

2025-26 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள நிலையில், சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சோ்க்கப்பட்ட 40 பேருக்கு, கிரீடம், மாலை மற்றும் பலூன் ஆகியவையும் வழ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 27 ஆயிரத்தில் உதவிகள்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா் நல குறைகேட்பு கூட்டத்தில், ரூ. 27 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித் தொகை, வீட்டுவரி மீளப்பெறுதல் போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்... மேலும் பார்க்க

பூச்சொரிதல் விழா ஊா்வலத்தில் இரு தரப்பினா் மோதல்: இருவா் காயம்

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்கு பூத்தட்டு எடுத்துச்சென்றபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா். பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்த... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீா் தொட்டி வைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் கோடை கால குடிநீா்த் தொட்டி அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டைபேருந்து நிலையத்துக்கு வரும் ஆயிரக்கணக்கானோா் குடிநீா் வசதி இல்லாததால் அரு... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை ஒருங்கிணைந்து நிறைவேற்றுவோம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அனைத்துத் துறையினரும் இணைந்து செயல்பட்டு முழுமையாக நிறைவேற்றுவோம் என்றாா் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

‘பெண் குழந்தைகளைக் காப்போம்’ திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சாா்பில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’, ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற திட்டத்த... மேலும் பார்க்க