செய்திகள் :

பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்

post image

பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில், இது குறித்து மு. க .ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது: ‘தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, பல ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பாஜகவுக்கு சாதகமான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை திசை திரும்புகிறது. இத்தகைய நடவடிக்கையானது சீர்திருத்தம் அல்லவே.

பிஹாரில் நடைபெற்ற சம்பவங்கள் இதனை வெளிகாட்டுகின்றன. தங்களுக்காக வாக்கு செலுத்திய மக்களே திரும்பவும் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என தில்லி ஆளுமை தெரிந்து வைத்துள்ளது.

உங்களால் எங்களை வீழ்த்த முடியவில்லையென்பதால், எங்கள் வாக்களர்களை நீக்கும் நடவடிக்கையை கையிலெடுத்துள்ளீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்.

நமது ஜனநாயகத்துக்கு ஏதேனும் அச்சுறுத்தல் விளைவிக்கபட்டால், கடும் எதிர்வினை எதிரொலிக்கும். தமிழ்நாடு முழு பலத்துடன் தமது குரலை எழுப்பும். இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் ஜனநாயக சக்திகளை ஒன்றுவிடாமல் திரட்டி போராடுவோம்.

இந்த விவகாரம் வெறுமனே பிஹார் என்ற ஒரேயொரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. நமது குடியரசின் அடித்தளம் சம்பந்தப்பட்ட ஒன்று. ஜனநாயகம் மக்களுக்கே சொந்தம். அதை அபகரிக்க முடியாது!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The Special Intensive Revision is being misused to quietly erase voters - Chief Minister of Tamil Nadu

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: கைதானவரை அடையாளம் காட்டினாரா சிறுமி?

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சூலூர்பேட்டையில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும், அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவலறிந்த ... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க