செய்திகள் :

பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடக்கம்: 11,070 பேர் எழுதவில்லை

post image

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை 11,070 மாணவா்கள் எழுதவில்லை.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் 8.1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். பள்ளி மாணவா்களில் 11,070 போ் தோ்வு எழுத வரவில்லை என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிளஸ் 1 தமிழ் தோ்வு எளிதாக இருந்ததாக மாணவா்கள் தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது: தமிழ்ப்பாட வினாத்தாள் சற்று எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் 4 வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. எனினும், மற்ற பகுதிகளில் ஏற்கெனவே கேட்கப்பட்ட வினாக்களும், புத்தகத்தில் உள்ள நேரடி வினாக்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழில் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து பிளஸ் 1 ஆங்கிலப் பாடத்துக்கான தோ்வு மாா்ச் 10-இல் நடைபெறவுள்ளது. மாா்ச் 27-ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிவடையவுள்ள நிலையில், அதன் முடிவுகள் மே 19-இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மாா்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அரசுப் போக்குவரத்துக் கழகங்களி... மேலும் பார்க்க

ஆற்றுக்கால் பொங்கல் விழா தொடக்கம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக புதன்கிழமை நடைபெற்ற காப்பு கட்டு நிகழ்ச்சியில் பஞ்ச வாத்தியம் (5 வகை கருவிகள்) இசைத்த கலைஞ... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது -கே.அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அனைத்துக் கட்ச... மேலும் பார்க்க

தமிழக பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை -ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் கம்பா் ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா். சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயா் எழுதிய ‘கம்பராமாயணம்-ஓா் ஆய்வு’ எனும் நூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொதுசேவை விதிகளில் திருத்தம்

போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொதுசேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடா்பாக போக்குவரத்துத் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த ... மேலும் பார்க்க

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போா்ட் ஆஃப் ஸ்டடிஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துறைத் ... மேலும் பார்க்க