செய்திகள் :

புதுச்சேரி கடற்கரையில் திரையிடப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா!

post image

புதுச்சேரி கடற்கரையில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை திரையிட்டுள்ளனர்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம் தேதி வெளியானதிலிருந்து இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

காரணம், இணைசேராத காதலர்களின் கதையாக உருவான இப்படம் வெளியானபோது ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களுக்காவும் காட்சியமைப்புகளுக்காகவும் ரசிகர்களை ஈர்த்தது.

’இங்க என்ன சொல்லுது... ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?’ என்கிற வசனத்தை இன்றையகால இளைஞர்களும் பயன்படுத்தும் அளவிற்கு படத்தில் வசனங்களின் பங்கு அபாரமாக இருந்தன.

மேலும், சென்னை பிவிஆர் திரையரங்கில் மறுவெளியீட்டிலேயே இப்படம் 1000 நாள்களைக் கடந்து சாதனையைப் படைத்தது. இதுவே, மறுவெளியீட்டில் ஆயிரம் நாள்களைக் கடந்த முதல் இந்திய சினிமா.

இதையும் படிக்க: எம்புரான் படத்திலிருந்து விலகிய லைகா?

இந்த நிலையில், நேற்று (மார்ச் 15) விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பெரிய எல்ஈடி திரை மூலம் புதுச்சேரி ராக் கடற்கரை பகுதியில் திரையிட்டுள்ளனர்.

இதனை, நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடி அமர்ந்து கண்டுகளித்தனர். இதற்கு, பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் தொடர்ந்து இதுபோல் கடற்கரை பகுதிகளில் காட்சிப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதைப்பார்த்த சென்னை ரசிகர்கள் மெரினா கடற்கரையிலும் இதுபோல் செய்யலாமே என தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வீர தீர சூரன் புரமோஷன் பணிகள் துவக்கம்!

வீர தீர சூரன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் துவங்கியுள்ளது.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர... மேலும் பார்க்க

வெற்றிமாறன் பட வாய்ப்பை மறுத்த சீரியல் நடிகை கோமதி பிரியா!

சின்ன திரை நடிகை கோமதி பிரியா வெற்றிமாறன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை நிராகரித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் சிறகடிக்... மேலும் பார்க்க

தனியார் பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்திய மாணவர் கைது!

உ.பி.யில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் ஐஐஎம்டி தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் காலி... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி - சிறப்பு கேமியோவில் பிரபல நடிகர்?

குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரபல நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ படத்தின் மீது பெரிய... மேலும் பார்க்க

சிறகடிக்க ஆசை மீனா குறித்து வருத்தம் தெரிவித்த எதிர்நீச்சல் இயக்குநர்!

சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை கோமதி பிரியாவை எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம் பாராட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் நாக சைதன்யா - சோபிதா!

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் கார் பந்தயப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவும் கடந்தாண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட... மேலும் பார்க்க