செய்திகள் :

புதுச்சேரி: `சிபிஎஸ்இ தேர்வில் மாணவர்களின் தோல்விக்கு மாநில அரசே காரணம்!’ - திமுக குற்றச்சாட்டு

post image

புதுச்சேரியில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்ததற்கு, என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசுதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சுமத்தியிருக்கிறார்.

`விடைத்தாள்களின் நகலுக்கு ரூ.500 வாங்கும் அரசு’

இது குறித்துப் பேசிய அவர், ``புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியதன் விளைவாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தோல்வியடைந்துள்ளனர். இந்த தோல்வி புதுச்சேரி அரசின் கல்விக் கொள்கையின் தோல்வியை தெளிவாக உணர்த்துகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த முடிவு, அரசின் திட்டமிடப்படாத அணுகுமுறையையும் காட்டுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சியோ, மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலோ வழங்கப்படவில்லை.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

அதன் விளைவாக, மாணவர்கள் கடுமையான உளவியல் மற்றும் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த அவலநிலைக்கு புதுச்சேரி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என வன்மையாக கண்டிக்கிறேன். புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், தங்கள் விடைத்தாள்களின் நகல்களைப் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு ரூ.500/- செலுத்த வேண்டியிருக்கிறது. அதேபோல ஒரு கேள்விக்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.100/- செலவாகிறது. அதேசமயம், தமிழ்நாடு மாநில சமச்சீர் பாடத்திட்டத்தில் விடைத்தாள் நகலை பெறுவதற்கு செலவாகும் தொகை வெறும் ரூ.275/- மட்டும்தான்.

`புதுச்சேரி அரசின் செயல் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும்...’

அத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நகல்களைப் பெறுவதற்கு இரு மடங்கு செலவாகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கட்டணங்கள், மாத கடுமையான நிதிச்சுமையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. தங்களின் விடைத்தாள்கள் முறையாக திருத்தப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள நினைக்கும் மாணவர்களின் தலையில், இப்படியான செலவுகளை ஏற்றுவது அநீதியான ஒன்று. இப்படியான பொருளாதார பாதிப்புகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக அமைவதுடன், உளவியலாகவும் அவர்களை பாதிக்கிறது.

தேர்வு முடிகள் | கோப்புப் படம்

அதேபோல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்ட தோல்விகள், மாணவர்களின் கல்வி இடைநிற்றலை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், தோல்வியின் உளவியல் தாக்கத்தையும், மறுதேர்வு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான செலவுகளையும் தாங்க முடியாமல் கல்வியை கைவிடும் நிலைக்த் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் இத்தகைய குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டும் பயிற்சிகளோ, மறுதேர்விற்கு உரிய வழிகாட்டுதலோ முறையாக வழங்கப்படவில்லை. புதுச்சேரி அரசு இதில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது” என்றார்.

'எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன்' - கொதித்த ராமதாஸ் உடைந்த PMK? Anbumani|Imperfect Show 29.5.2025

* `எல்லாம் என் தவறு' - அன்புமணியை வறுத்தெடுத்த ராமதாஸ்! * இளைஞரணி பதவியிலிருந்து விலகிய முகுந்தன்! * அன்புமணி பற்றி மிகத் தாமதமாக உணர்ந்துள்ளார் ராமதாஸ்! - பிரேமலதா* மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி ஆல... மேலும் பார்க்க

`தேமுதிக-வுக்கு சீட் கொடுக்க வேண்டியது அதிமுக-வின் கடமை!' - சொல்கிறார் பிரேமலதா

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தே.மு.தி.க-வின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தே.மு.தி.க-விற்கு ராஜ்யசபா சீட் அளிக்க வேண... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கித் தாக்குதல்; பெண் எஸ்.ஐ உட்பட 4 காவலர்கள் இடமாற்றம்; பின்னணி என்ன?

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்குத் தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்தி... மேலும் பார்க்க

சேலம் மாநகர கூட்டத்தில் அடிதடி: ஒருபக்கம் தேசிய கீதம், மறுபக்கம் ஸ்நாக்ஸ் தாக்குதல் - நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த யாதவமூர்த்தி என்பவர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது மாநகராட்சி டெண... மேலும் பார்க்க

'அன்றே செத்து விட்டேன்' - அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய அந்த '10' குற்றச்சாட்டுகள் என்னென்ன?

இன்று காலை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அன்புமணியை நோக்கி ரா... மேலும் பார்க்க