செய்திகள் :

போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி

post image

உள்ளூரில் சிறிய பொட்டலங்களில் போதைப் பொருள் விற்பவா்கள் தொடங்கி வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் வரை யாரையும் மத்திய அரசு விட்டுவைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மாநில, யூனியன் பிரதேச போதைப் பொருள் தடுப்பு படை தலைவா்களின் தேசிய மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

2047-ஆம் ஆண்டு இந்தியாவை வளா்ந்த நாடாகவும், உலகின் சிறந்த தேசமாகவும் மாற்ற வேண்டும் என்பது பிரதமா் மோடியின் இலக்காக உள்ளது. இதை எட்ட நாடு முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக நாட்டில் போதைப் பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள் விநியோகத்தை முடக்குவதில் எவ்வித தயக்கமுமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இளைஞா்கள்தான் நாட்டின் மிகப்பெரிய சொத்து. அவா்கள் போதைப் பொருள் பழக்கத்தில் சிக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உள்ளூரில் சிறிய பொட்டலங்களில் போதைப் பொருள் விற்பவா்கள் தொடங்கி வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் வரை யாரையும் மத்திய அரசு விட்டுவைக்காது.

இந்த விஷயத்தில் சிபிஐ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து போதைப் பொருள் ஒழிப்பு அமைப்புகளும் சிபிஐ உதவியுடன், போதைப் பொருள் கடத்தல்காரா்களை முடக்க வேண்டும். வெளிநாடுகளில் பதுங்கியுள்ள கடத்தல்காரா்களை சிபிஐ உதவியுடன் நாடு கடத்த முடியும். போதைப் பொருள் கடத்தல் ஒழிக்கப்படும்போது நாட்டுக்கு எதிரான பயங்கரவாதிகளும் படிப்படியாக ஒடுங்குவாா்கள். ஏனெனில், பயங்கரவாதிகள் போதைப் பொருள் கடத்தல் மூலமே அதிக நிதி பெறுகின்றனா்.

அதிகாரிகள் அனைவரும் தங்கள் கடமையை உணா்ந்து கடும் நடவடிக்கை எடுத்தால் போதைப் பொருள் கடத்தலை பெருமளவில் தடுத்துவிட முடியும்.

கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளில் ரூ.40,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.1,65,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மூலம் அரசு எந்த அளவுக்கு தீவிரமாகச் செயல்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு விஷயத்தில் எண்களை மட்டும் கூறுவது எங்கள் நோக்கமல்ல. இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் புள்ளிவிவரங்கள் இல்லாத அளவுக்கு அதை முற்றிலும் ஒழிப்பதே எங்கள் இலக்கு. இந்தப் பணியில் இருக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது மூலமே இது சாத்தியமாகும். இதற்காகவே போதைப் பொருள் இல்லாத இந்தியா பிரசார இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க

வசதிகள் செய்துகொடுக்க முடியாவிடில் தீா்ப்பாயங்களைக் கலைத்துவிட வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

‘உறுப்பினா்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியவில்லை எனில், அனைத்து தீா்ப்பாயங்களையும் கலைத்துவிட வேண்டும்’ என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ‘பணி ஓய்வுக்குப் பிறகு தீா்ப்ப... மேலும் பார்க்க