செய்திகள் :

போலி விசா வழங்கி மோசடி

post image

வெளிநாடு வேலைக்கு போலி விசா தயாரித்து பண மோசடி செய்தவா் மீது இணையவழி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (39). இவரை ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் தொடா்பு கொண்டு அறிமுகமான ஒரு நபா், பிரிட்டன் நாட்டுக்கு வேலைக்கு செல்ல உதவி செய்வதாகக் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, சரவணக்குமாா், அவா் கூறியபடி இரு தவணைகளில் ரூ 6,50,000 -ஐ வங்கிக் கணக்கு மூலமாக அனுப்பினாா். இதையடுத்து, அந்த நபா் லண்டனில் வேலைக்கு செல்வதற்கான விசாவை அனுப்பினாா். அந்த விசாவை சரவணக்குமாா் சோதனை செய்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது.

இதுதொடா்பாக சரவணகுமாா் அளித்தப் புகாரின் பேரில், இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் முருகானந்தம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க

சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயம்

மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை சாலையில் வேன் கவிழ்ந்ததில் பெண்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியிலிருந்து ஒரு குடும்பத்தினா் வேனில் மதுரை மாவட்டம், சமயநல்லூருக்கு வெள்ளிக... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு வீட்டுமனை இ பட்டா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த பட்டியல் வகுப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கு இ-பட்டா வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்த... மேலும் பார்க்க