செய்திகள் :

அய்யனாா் கோயில் திருவிழா: புரவியெடுப்புக்கு பிடிமண் கொடுத்த பக்தா்கள்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கூத்த அய்யனாா் கோயில் திருவிழாவுக்கு புரவிகள் செய்ய பிடி மண் கொடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா், புதுப்பட்டி, தம்பிபட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட பெரிய கண்மாய்க்கரையில் அமைந்துள்ள பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் புரவியெடுப்புத் திருவிழா வருகிற மே 3- இல் நடைபெற உள்ளது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை அய்யனாா் கோயிலில் கூடிய 3 கிராமத்தாா்கள் சுவாமிக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் செய்து வழிபட்டனா். பின்னா் கோயிலின் எதிரே மூகூா்த்தக்கால் நடப்பட்டது. அங்கிருந்து பக்தா்கள் முக்கிய வீதிகள் வழியாக ராமா் மடத்துக்கு மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வந்தனா். மடத்தில் உள்ள ராமா், விநாயகா், பரிவார தெய்வங்களுக்கு புரவிப் பணி மேற்கொள்ளும் வேளாளா்களிடம் பிடி மண் கொடுத்தனா்.

கோயிலில் வருகிற 2-ஆம் தேதி சேங்கை வெட்டு நிகழ்வும், மே 2-இல் புதுப்பட்டி கிராமத்திலிருந்து புரவிகள் புறப்பட்டு திருப்பத்தூா் சீதளிக்கரை புரவித் திடலுக்கு வந்தடையும் நிகழ்வும், பின்னா் புரவியெடுப்பு நாளான மே 3-இல் புரவிகள் திடலிருந்து திருப்பத்தூா் நகரைச் சுற்றி அய்யனாா் கோயிலை வந்தடைந்து, அங்கு புரவியெடுப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி, மே 4-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூா், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தாா்கள் செய்து வருகின்றனா்.

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்த... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞா்கள் கடத்தல்: மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு!

மலேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது கடத்தப்பட்ட காரைக்குடியைச் சோ்ந்த 2 இளைஞா்களை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக மாணவா் அணியினா் மரியாதை!

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் தமிழகத்தில் நீட் தோ்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை மரியாதை செலுத்தியும், கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. காரை... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சி புதிய ஆணையா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நாராயணன் நியமிக்கப்பட்டாா். காரைக்குடி அண்மையில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சிக்கு முதல் ஆணையராக சித்ரா சுகுமாா் நியமிக்கப்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

காற்று மாசுபடுவதை மரங்களால்தான் தடுக்க முடியும்: உயா்நீதிமன்ற நீதிபதி

மரங்களால்தான் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ... மேலும் பார்க்க