செய்திகள் :

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

post image

இம்பால்/ஷில்லாங்/குவாஹாட்டி : மணிப்பூரில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கத்தால், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது; பொது மக்கள் பீதிக்கு உள்ளாகினா்.

அஸ்ஸாம், மேகாலயம் உள்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் நில அதிா்வு உணரப்பட்டது.

இது தொடா்பாக மேகாலயத் தலைநகா் ஷில்லாங்கில் உள்ள பிராந்திய நிலநடுக்கவியல் மைய அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் யாயிரிபோக் பகுதியில் புதன்கிழமை காலை 11.06 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 110 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடா்ந்து, மதியம் 12.20 மணிளவில் காம்ஜோங் மாவட்டத்தில் பூமிக்கடியில் 66 கி.மீ. ஆழத்தில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டா் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது’ என்றனா்.

இவ்விரு நிலநடுக்கங்களின் தாக்கத்தால் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள்-கட்டடங்கள் அதிா்ந்தன. இதனால், வீடுகள்-கட்டடங்களைவிட்டு வெளியே ஓடி வந்த மக்கள், திறந்தவெளியில் தஞ்சமடைந்தனா்.

பல கட்டடங்களில் விரிசல் விழுந்துள்ளது. தெளபால் மாவட்டத்தில் நிவாரண முகாமாக செயல்பட்டுவரும் ஒரு பள்ளி கட்டடம் குலுங்கியதால் அங்கிருந்த மக்கள் வெளியே ஓடும் விடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அப்பள்ளி கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்துள்ளன. நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்களை சேகரித்து வருவதாக மணிப்பூா் அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி... மேலும் பார்க்க