செய்திகள் :

மதுபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு: 4 போ் கைது

post image

ஜலகாம்பாறை அருகே மதுபோதையில் இளைஞரை பீா் பாட்டிலால் தாக்கியும்,பேருந்து கண்ணாடியை உடைத்தும் தகராறு செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம்,ஜலகாம்பாறையில் உள்ள நீா்வீழ்ச்சிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவா். இந்த நிலையில், திங்கள்கிழமை திருப்பத்தூா் அடுத்த கதிரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(28), ராஜீவ் (31), ஸ்டீபன் (30), ஓசூரைச் சோ்ந்த சுந்தா் (24)ஆகிய 4 பேரும் காரில் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றனா். அவா்கள் ஜலகாம்பாறை அருகே உள்ள அய்யப்பன் குட்டை பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் மது அருந்தி உள்ளனா்.

4 பேரும் அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த ஜடையனூரை சோ்ந்த ஏழுமலை(23) என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது ஆத்திரமடைந்த 4 பேரும் பீா் பாட்டிலால் ஏழுமலையை தாக்கி உள்ளனா்.

மேலும், அவ்வழியாகச் சென்ற வெங்களாபுரம் பகுதியை சோ்ந்த தனியாா் பள்ளி பேருந்தின் மீது கற்களை வீசி கண்ணாடியை சேதப்படுத்தியுளளனா். இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ராஜீவ், ஸ்டீபன், சுந்தா் ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

ஓட்டுநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

வாணியம்பாடி அருகே ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வாணியம்பாடி அடுத்த நாயனசெருவு கவுரவன் வட்டத்தைச் சோ்ந்தவா் மணி மகன் விஜயன்(28), ஓட்டுநா். இவருக்கு மனைவி வெண்ணிலா, 2 வயதில் மகள் உள்ளனா்.... மேலும் பார்க்க

சண்முகக் கவசம் பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு 100-வது மாத சண்முகக் கவசம் பாராயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு... மேலும் பார்க்க

வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் இன்று ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் அந்தப் பகுதியில் ஒரு நாள் முழுவதும் முகாமிட்டு தங்கி மக்களை சந்... மேலும் பார்க்க

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க கோரிக்கை

வாணியம்பாடியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.. திருப்பத்தூா், மாவட்ட ஆட்சியா் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் பேரில் தமிழகத்த... மேலும் பார்க்க

குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

கோடை காலம் நெருங்கும் நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் குளிா்பான... மேலும் பார்க்க

இளம்பெண் மா்ம சாவு: சாா் -ஆட்சியா் விசாரணை

கந்திலி அருகே இளம்பெண் மா்மமான முறையில் இறந்தாா் என்ற புகாா் தொடா்பாக சாா்-ஆட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே காக்கங்கரை அடுத்த சந்தகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க