செய்திகள் :

மதுரை: கல்குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்; பங்கேற்று கைதான ஆர்.பி.உதயகுமார்; பின்னணி என்ன?

post image

மதுரை மாவட்டம் திருமால் கிராமத்திலுள்ள கல்குவாரியை அகற்றக்கோரி அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ரேசன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட பெண்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள்

திருமங்கலம் தொகுதியிலுள்ள திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கிராமத்தில் மக்களின் எதிர்ப்பை மீறி கிரஷர் கல்குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விதிமுறை மீறி கல்குவாரி செயல்படுவதால் கிராமத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், கல்குவாரியிலிருந்து வெளியேறும் மண் துகள் மற்றும் தூசுகளால் குழந்தைகள், முதியோர்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாகவும், அதனால் தங்கள் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கடந்த சில நாட்களாக கிராமத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி.உதயகுமார், 'கல்குவாரியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்' என்று மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியவர், கிராம மக்களின் போராட்டத்திலும் பங்கேற்றார்.

இந்த நிலையில் திருமால் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை மதுரையில் நேற்று நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்துக்கு ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வாகனங்களில் வந்தவர்களை கலெக்டர் அலுவலக சாலையில் காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில், திருவள்ளுவர் சிலை அருகிலிருந்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்ததால் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.பி.உதயகுமாருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டத்தில் கிராம மக்கள்
போராட்டத்தில் கிராம மக்கள்

இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரும் காவல்துறையினரும் ஆர்.பி உதயகுமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்பு அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர். போராட்டத்தின்போது நான்கு பெண்கள் மயக்கமடைந்ததாகச் சொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்... மேலும் பார்க்க

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது... மேலும் பார்க்க

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பய... மேலும் பார்க்க

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன?

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 29), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்திற்காக 20 பரிந்துரைகளைப் பரிந்துரைத்திருந்தார். ஹமாஸின் ஒப்புதல் ஐ.நா பொதுசபைக்காக, அப்போது அமெரிக்கா சென்... மேலும் பார்க்க