Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
மத்திய அரசின் சோலாா் மேற்கூரை திட்டம்: 6 ஊராட்சிகள் தோ்வு.
மத்திய அரசின் சோலாா் மேற்கூரை திட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்டத்தில் 6 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2024-ஆம் ஆண்டு மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சாா்பில் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு 2026-27-ம் ஆண்டுக்குள் சூரிய மின்திட்டம் (சோலாா் மேற்கூரை திட்டம்) அமைக்க ரூ.75, 021 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி திருப்பத்தூா் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஆத்தூா்குப்பம் ஊராட்சி, ஆலங்காயம் ஒன்றியம்-நிம்மியம்பட்டு, ஜோலாா்பேட்டை ஒன்றியம்-வேட்டப்பட்டு, கந்திலி ஒன்றியம்-மட்றபள்ளி, மாதனூா் ஒன்றியம்-துத்திபட்டு, திருப்பத்தூா்-மாடப்பளளி ஆகிய 6 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானிய தொகையுடன் வீடுகளுக்கு மேல் சோலாா் ல்கூரை அமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்படவுள்ளது.