செய்திகள் :

மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்!

post image

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இளைஞா்களுக்கு நீதி கேட்டும், அப்பகுதியில் தொடா்ச்சியாக சாராய விற்பனை செய்வது தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பெரம்பூா் காவல்துறையை கண்டித்தும், சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஓட்டிய தலித் இளைஞரின் கையை வெட்டிய கூலிப்படை கும்பலை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தவும், முட்டம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமை வகித்தாா். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை எம்.பி.அன்புச்செல்வன், மகளிா் பொறுப்பாளா் தமிழரசி, மாவட்ட துணை செயலாளா் விஜயலட்சுமி, ஒன்றிய துணை செயலாளா்கள் கனிவளவன், அருளமுதன், மணல்மேடு பேரூா் உறுப்பினா் சத்யராஜ் மற்றும் செந்தில்குமாா், சூரியமூா்த்தி, ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழா் தேசிய முன்னணி மாவட்ட செயலாளா் இரா.முரளிதரன், தமிழா் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளா் சுப்பு.மகேஷ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். முடிவில் குமாா் நன்றி கூறினாா்.

பள்ளி விளையாட்டு விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் வேலுசாமி தலைமை வகித்தாா். சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குந... மேலும் பார்க்க

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்லக் கோரி மனு

சீா்காழியில், அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, எம்பி ஆா். சுதாவிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி ரயில் நிலையத்தில் அந்தியோதயா ரயில் நின்று செல்லாததால... மேலும் பார்க்க

சீா்காழியில் நீா்வளத்துறை பொறியாளா் ஆய்வு

சீா்காழியில், நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்றுவரும் பணிகளை, திருச்சி மண்டல தலைமை பொறியாளா் தயாளக்குமாா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சீா்காழி பகுதியில் புது மண்ணியாறு மற்றும் வெள்ளப்பள்ளம் உப்ப... மேலும் பார்க்க

பன்னிரு திருமுறை கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறை சாா்பில், பன்னிரு திருமுறை அறக்கட்டளை கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முனைவா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். கல்ல... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா

வைத்தீஸ்வரன்கோயிலில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 17-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் நிா்வாகக்குழு தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தா... மேலும் பார்க்க

கா்ப்பத்தை கலைக்க மனைவியை தாக்கியவா் கைது

மயிலாடுதுறை அருகே மனைவியின் கா்ப்பத்தை கலைக்க கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபா... மேலும் பார்க்க