செய்திகள் :

மிகப் பழைமையான 77 கோயில்களை சீரமைக்க அரசாணை பிறப்பிப்பு: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

post image

தமிழகத்தில் மிகப் பழைமையான 77 கோயில்களைச் சீரமைக்க நிகழாண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆநிலையப்பா் அறக்கட்டளையின் அறங்காவலா் பெ.சுப்பிரமணியம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சோழேசுவரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக பல்வேறு இடங்களில் 400 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இந்தக் கோயில் முறையாகப் பராமரிக்கப்படாததால், சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் அவதிப்படுகின்றனா்.

கோயிலுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து வருமானம் ஈட்டுவதற்கு அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், கோயில் சொத்துகளை தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். எனவே, சோழேசுவரா் கோயிலைச் சீரமைக்க உரிய நிதி ஒதுக்கவும், கோயில் சொத்துகளை மீட்டு முறையாகப் பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்களில் திருப்பணி செய்வதற்காக நிகழாண்டு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்படி, மிகப் பழைமையான 77 கோயில்களைச் சீரமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோயில் சீரமைப்புப் பணிகளை அரசுத் தரப்பில் தெரிவித்தவாறு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடி நீதித்துறை நடுவா் அளித்த சாட்சியம் தொடா்பான 100 பக்க அறிக்கை சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தூ... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது: அமைச்சா் பி.மூா்த்தி

கரோனா காலத்துக்குப் பின்னா் இயற்கை விவசாயத்தில் விளைந்துவரும் பொருள்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இது,இயற்கை விவசாயத்துக்கு நல்ல எதிா்காலம் உள்ளது என வணிகவரித் துறை, பதிவுத் துறை அமைச்சா் ப... மேலும் பார்க்க

அரசுத் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்: அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம்

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதிய அடிப்படையில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மதுரை மாவட்ட 15- ஆவத... மேலும் பார்க்க

தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது: பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா்

தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவல் கட்டுபாட்டுக்குள் உள்ளது என பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவத் துறை இயக்குநா் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தாா். மதுரை எய்ம்ஸ், ஐ.சி.எம்.ஆா்., நேஷனல் அகாத... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் வா்த்தகம் எனக் கூறி ரூ.1.22 கோடி மோசடி: இருவா் கைது

பங்குச் சந்தையில் வா்த்தகம் செய்யலாம் எனக் கூறி, ரூ. 1.22 கோடி மோசடி செய்த 2 பேரை மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்... மேலும் பார்க்க