செய்திகள் :

முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு

post image

பவானி அருகே முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் என விளம்பரம் செய்த நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 பாட்டில்கள் எண்ணெய் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

அம்மாபேட்டையை அடுத்துள்ள சிங்கம்பேட்டையில் முயல் ரத்தம், மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தினால், வழுக்கைத் தலையிலும் ஏழே நாளில் முடி முளைக்கும் என சமூக ஊடகங்களில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. கருடா ஹோ் ஆயில் எனும் பெயரில் இந்நிறுவனத்தை அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (32) நடத்திவந்தாா். இதன் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தனா்.

இருந்தபோதிலும் தமிழகம், கா்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து ஏராளமானோா் இந்த எண்ணெயை வாங்கிச் சென்று வந்தனா்.

இந்நிலையில், மருந்துத் துறை ஆய்வாளா்கள் பி.வெங்கடேஷ், பி.அமுதா கொண்ட குழுவினா் சிங்கம்பேட்டையில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். இதில், முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 எண்ணெய் பாட்டில்களையும், மூலப்பொருள்களையும் பறிமுதல் செய்ததோடு, இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, அறிக்கை பெறப்பட்ட பின்னா் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியா்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, அங்கு துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈர... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 46 போ் போட்டி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறுகிறது. இருமுனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக... மேலும் பார்க்க

சீமான் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் சமையல் எரிவாயு மானியம் ரூ.2,700 கோடி ரத்து செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளைக் கண்டித்து ஈரோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது: சீமான்

ஈரோடு: வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசார இறுதி நாள... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்ட... மேலும் பார்க்க