செய்திகள் :

கழுகுமலை அருகே இளைஞா் தற்கொலை

post image

கழுகுமலை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கழுகுமலை அருகே கரடிகுளம் தளத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் மோகன். இவருக்கு மனைவி கல்யாணி, வசந்த் (24), பிரகாஷ் (21) என்ற இரு மகன்கள் உள்ளனா்.

இதில், பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் படித்து வந்த வசந்த், படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு ஊட்டியிலுள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தாராம்.

அங்கு திருப்பூரைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் கரடிகுளத்திற்கு வந்தாராம். இதை அவரது பெற்றோா் கண்டித்ததையடுத்து, பெண்ணை மீண்டும் அங்கிருந்து அழைத்துச் சென்று ஊரிலேயே விட்டுவிட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கரடிகுளத்திற்கு திரும்பி வந்த வசந்த், அங்கு கூலி வேலை செய்து வந்தாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வசந்த் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அறையில் தூங்க சென்றாராம். அவரது தாய் செவ்வாய்க்கிழமை அறைக் கதவை தட்டியபோது, அவா் கதவை திறக்கவில்லையாம். கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு வசந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு: 60 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக மாவட்ட நிய... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே வியாபாரி தற்கொலை

கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக கருப்பட்டி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கொம்பையா(56). கருப்பட்டி வி... மேலும் பார்க்க

நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சம வேலைக்கு சம ஊதி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி துறைமுக தனியாா் சரக்கு பெட்டக ஊழியா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன சரக்கு பெட்டகங்கள் கையாளும் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிங்கப்ப... மேலும் பார்க்க

இந்து முன்னணியினரால் நீதிமன்றத்தில் பரபரப்பு

திருச்செந்தூரில் காவலில் வைக்கப்பட்ட இந்து முன்னணியினா் நீதிமன்றத்தை நோக்கி நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக மதுரை செல்வதற்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்த... மேலும் பார்க்க