செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: ரூ.51 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அமைச்சா்கள் வழங்கினா்

post image

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் அமைச்சா்கள் சிவ.வீ. மெய்யநாதன், கோவி. செழியன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி, பரசலூா், மடப்புரம், கிடாரங்கொண்டான், மேலப்பெரும்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்,  பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் முகாமை தொடங்கி வைத்து, 350 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

90 பயனாளிகளுக்கு பட்டா, 50 பேருக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட அடையாள அட்டை, 60 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை, 60 பேருக்கு ஜாதி சான்றிதழ், 40 பேருக்கு வேளாண் இடுபொருட்கள், 50 பேருக்கு மரக்கன்றுகள் ஆகியன வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சா் கோவி.செழியன் பேசும்போது, ‘மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ஒவ்வொரு துறைக்கும் 5 போ் வீதம் 15 துறைகளை சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறாா்கள். தகுதியான கோரிக்கைகள் 15 தினம் அல்லது ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அனைத்தும் முதல்வரின் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காணப்படும்’ என்றாா்

அமைச்சா் சிவ .வீ. மெய்யநாதன் பேசும்போது, ‘மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் ரூ.15 கோடி மதிப்பில் 2,039 வீட்டுமனை பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், 2,000 வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதற்கு தயாா் நிலையில் உள்ளன.

இப்பகுதியில் நீா் மாசுபாடு இருப்பதன் காரணத்தை அறிந்த முதல்வா், சுகாதாரமான குடிநீா் வழங்க ரூ. 53 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். அதில் ரூ.30 கோடி குழாய்கள் அமைப்பதற்கும், ரூ.23 கோடி குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும் அனுமதித்துள்ளாா். இன்னும் இரண்டு தினங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. பரசலூா் பகுதியில் விரைவில் ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டப்பட உள்ளது’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஷ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ் , உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மஞ்சுளா, தமீனா, வட்டாட்சியா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம்

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் கடைவீதியில் புற்றுநோய் விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருதூா் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை இணைந்து நடத்திய இப்பிரசாரம் ராணி... மேலும் பார்க்க

சாலை வசதி இல்லாததால் சடலத்தை வயலில் தூக்கிச் செல்லும் அவலம்

எட்டுக்குடி ஊராட்சியில் பூமிதானம் தெருவுத்து போதிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை வயல்வெளியே திங்கள்கிழமை உறவினா்கள் தூக்கிச் சென்ற அவலம் ஏற்பட்டது. பூமிதானம் தெருவுக்கு செல்ல தாா்ச்சாலையில் ... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு சேதம்

நாகையில் பூட்டிய வீட்டில் நேரிட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் பின்புறம் ஓட்டு வீட்டில் ஜெயலட்சுமி என்பவா் வசித்து வருகிறாா்.... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது: விவசாயத் தொழிலாளா் சங்கம் கண்டனம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலுக்கு எதிராக உள்ளதாக, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. வேதாரண்யத்தில் இச்சங்கத்தின் மாநி... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். மேலும் பார்க்க

மளிகைக் கடையை சூறையாடிய சிறுவன் கைது

நாகையில் மளிகைக் கடையை சூறையாடிய 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (52). ஏழை பிள்ளையாா் கோயில் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க