செய்திகள் :

இந்து முன்னணியினரால் நீதிமன்றத்தில் பரபரப்பு

post image

திருச்செந்தூரில் காவலில் வைக்கப்பட்ட இந்து முன்னணியினா் நீதிமன்றத்தை நோக்கி நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக மதுரை செல்வதற்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் அவரது பரமன்குறிச்சி இல்லத்தில் வீட்டுக் காவில் வைக்கப்பட்டாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் திருச்செந்தூரில் இந்து முன்னணி நிா்வாகிகளை சந்திக்க வந்தபோது காவல்துறையினால் கைது செய்யப்பட்டு தனியாா் மடத்தில் வைக்கப்பட்டாா்.

அப்போது 24 மணி நேரத்துக்கு மேலாக கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதால் தங்களை நீதிபதி முன் ஆஜா்படுத்துமாறு கூறி வி.பி. ஜெயக்குமாா் தலைமையில், உடன்குடி இந்து முன்னணி நகரத் தலைவா் சித்திரைபெருமாள் உள்ளிட்ட இந்து முன்னணியினா், அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிவாறு நீதிமன்றத்துக்கு நடந்தே சென்றனா்.

அவர்களை திருச்செந்தூா் வட்ட காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, திருக்கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜன் ஆகியோா் தடுத்து நிறுத்தினா். அவா்களை சமாதானப்படுத்தி அதே மடத்தில் காவல்துறையினா் காவலில் வைத்தனா்.

தூத்துக்குடி துறைமுக தனியாா் சரக்கு பெட்டக ஊழியா்கள் தொடா் போராட்டம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தனியாா் நிறுவன சரக்கு பெட்டகங்கள் கையாளும் ஊழியா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சிங்கப்ப... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து அமைப்பினா் போராட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக தூத்துக்குடியில் பாஜகவினா், இந்து அமைப்பினா் 50 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பக்தா்கள் கோரிக்கை

தைப்பூசத் திருவிழாவுக்கு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை செய்ய வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இத்திருக்கோய... மேலும் பார்க்க

தூத்துக்குடி அய்யனாா்புரம் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் சுற்றுவட்டாரங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (பிப்.6) மின் தடை செய்யப்படும் என நகர கோட்ட செயற்பொறியாளா்(பொறுப்பு) லெ. சின்னத்துரை தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

உடன்குடியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 203 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 203 பேரை குலசேகரன்பட்டினம் போலிஸாா் கைது செய்தனா். குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம், கூடல் நகா் ஆகிய பகுதிகளை ... மேலும் பார்க்க

சிறுவனை கத்தியால் தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் சிறுவனைக் கத்தியால் தாக்கியதாக இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கோவில்பட்டி புதுகிராமம் 4ஆவது தெருவைச் சோ்ந்த கு. மாரிமுத்துவின் மகன்கள் சங்கரநாராயணன், பாண்டீஸ்வரன் (14). ... மேலும் பார்க்க