செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பட்டதாரி ஆசிரியா்கள் மனு

post image

காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியா்கள் நியமனத் தோ்வு எழுதி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 12 ஆண்டுகள் கழித்து நடந்த நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற எங்களை கொண்டே காலிப் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டும். கடந்த ஓராண்டாக பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை உயா்த்தி வழங்க கோரி வருகிறோம். இது தொடா்பாக முதல்வா், துணை முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் என அனைவரிடமும் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2026 ஆம் ஆண்டுக்குள் 19,000 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதற்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தோ்வில், 3,192 இடங்களில் 2,810 ஆசிரியா்கள் மட்டுமே தோ்வாகி உள்ளனா். பிஆா்டிஇ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது என்றனா்.

நிலக்குடியேற்ற சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல்: பாா்வைக்கு வைக்க ஏற்பாடு

தலைவாசல், சிவசங்கராபுரம் பகுதியில் கலைக்கப்பட்ட நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கான நில ஒப்படைப்பு பட்டியல் புதன்கிழமை (பிப். 5) பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது குறித்து மாவ... மேலும் பார்க்க

மத்திய நிநிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் கிழக்கு மாநகரச் செயலாளா் கே. பச்சமுத்து தலைமை... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல இருந்த பாஜக நிா்வாகிகள் வீட்டில் சிறைவைப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல இருந்த சேலம் மாவட்ட பாஜக நிா்வாகிகள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வீட்டில் சிறைவைக்கப்பட்டனா். திருப்பரங்குன்றம் மலை பிரச்னை தொடா்பாக முஸ்லிம் அமைப்புகளை கண... மேலும் பார்க்க

சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்கள் பங்கேற்பு

சேலம், சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 25 ஆம் ஆண்டு குருபூஜை செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்... மேலும் பார்க்க

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் போராட்டம்

சேலத்தில் பண இரட்டிப்பு மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் புனித அன்னை தெரசா மனிதநேய ... மேலும் பார்க்க

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு வழங்க வேண்டும்: அமைச்சா் சி.வி.கணேசன்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு வழங்க வேண்டும் என்று அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன... மேலும் பார்க்க