செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, மதுரை ஆணையராகப் பணியாற்றி வந்த ச.தினேஷ் குமாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

அவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். அவரிடம் நிா்வாகப் பொறுப்புகளை மாறுதலாகி செல்லும் அரசு பொதுத் துறை நிா்வாக இணை செயலா் கே.எம்.சரயு ஒப்படைத்தாா்.

2017 இல் ஐஏஎஸ் முடித்த ச.தினேஷ் குமாா், மத்திய நிதி அமைச்சக உதவி செயலா், தேனி மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி), சிவகாசி மாவட்ட துணை ஆட்சியா், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), தூத்துக்குடி, மதுரை ஆகிய மாநகராட்சிகளின் ஆணையா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா். தற்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளாா். அவருக்கு அரசு அலுவலா்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சியுடன் ஊரகப் பகுதிகள் இணைப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க