செய்திகள் :

மாநகராட்சி, நகராட்சியுடன் ஊரகப் பகுதிகள் இணைப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

post image

உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைப்பது தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைத்தல், ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயா்த்துதல் தொடா்பான முதல்கட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் தலைவா்கள், தன்னாா்வு தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தின்போது கிருஷ்ணகிரி நகராட்சியுடன் கட்டிகானப்பள்ளியை மட்டுமின்றி பையனப்பள்ளி, வெங்கடாபுரம், அகசிப்பள்ளி ஊராட்சிகளை இணைக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியுடன் 8 ஊராட்சிகளை இணைக்க வேண்டும். போச்சம்பள்ளியை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியரிடம் இதுதொடா்பாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

பின்னா் ஆட்சியா் ச.தினேஷ் குமாா் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் இணைத்தல், பேரூராட்சியாக தரம் உயா்த்துதல் குறித்த அறிவிப்பு டிச. 31 ஆம் தேதி வெளியானது. இதுகுறித்து, கருத்துகளை தெரிவிக்க 6 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துகளை மனுவாக அளிக்கும்பட்சத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் கவிதா, ஒசூா் துணை ஆட்சியா் பிரியங்கா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க