செய்திகள் :

Erode & Delhi Election live: ஈரோட்டில் இருமுனை... டெல்லியில் மும்முனை; தொடங்கியது வாக்குப் பதிவு!

post image

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு!

தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் த்தேர்தல் வாக்குப்பதிவு!

ஈரோடு இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 2023-ல் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் மீண்டும் எம்.எல்.ஏ-வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு இறுதியில் உயிரிழந்ததைத்தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி (இன்று) டெல்லி சட்டமன்றத் தேர்தலோடு இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, த.வெ.க ஆகிய கட்சிகள் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டதால் தி.மு.க-வும், நா.த.க-வும் நேரடியாக தேர்தல் களத்தில் மோதும் சூழல் உருவானது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல்

தி.மு.க, கடந்த 2011-ல் தேமுதிக சார்பில் இதே தோகுடியில் போட்டியிட்டு வென்ற வி.சி.சந்திரகுமாரை களமிறக்கியிருக்கிறது. நாதக எம்.கே.சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலையில் ஈரோட்டில் வாக்குப் பதிவு தொடங்கியது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல்:

டெல்லி சட்டமன்றத் தேர்தல் - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலையில் தொடங்கியிருக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து களமிறங்குகின்றன. ஆம் ஆத்மியின் வருகைக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போராடிக்கொண்டிருக்கும் காங்கிரஸும், பா.ஜ.க-வும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இதனால், ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பா.ஜ.க என்ற மும்முனைப் போட்டி உருவாகியிருக்கிறது.

மாட்டு வண்டியில் வந்த எடப்பாடி; ஆப்சன்ட் ஆன செங்கோட்டையன் - அவிநாசி அத்திக்கடவு விழா துளிகள்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, "அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றியதற்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி அத்திக்கடவு ... மேலும் பார்க்க

'மத்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்...' - மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா

கலவரம், இன்டர்நெட் தடை, லாக்டவுன் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக, மணிப்பூரின் அன்றாடம் ஆகிவிட்டது. மணிப்பூர் மாநிலத்தின் ஆட்சியில் இருப்பது பாஜக அரசு. 'கலவரங்கள் குறித்து பெரிதாக எந்த நடவடிக்கைகளும் எடுக்... மேலும் பார்க்க

` மின்சாரம் துண்டிப்பு; சூரிய ஒளி வராத தனிச்சிறை' - உருக்கமான கடிதம் எழுதிய இம்ரான் கான்

ஊழல் வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.Second Open Letter to the Chief of Army Staff by Former Prime Minister Imran Khan - February 8,... மேலும் பார்க்க

பிளாஸ்டிக்கை தடை செய்த ஜோ பைடன்: தடையை நீக்கிய ட்ரம்ப் - சொல்லும் காரணம் தெரியுமா?

முன்னாள் அதிபர் ஜோ பைடன், 2035-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளையும் படிப்படியாக ஒழிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் முதல்படியாக பட... மேலும் பார்க்க

'தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது..?' - புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்..."மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காததால் மக்கள் மத்திய அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். ... மேலும் பார்க்க