செய்திகள் :

'தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது..?' - புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ்.பாரதி

post image
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்...

"மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காததால் மக்கள் மத்திய அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். இதற்கு திருவண்ணாமலை உள்ளிட்ட பொதுக்கூட்டங்களில் கூடிய மக்களின் கூட்டமே சாட்சி.

ஏன் தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு இந்த ஓரவஞ்சனை... தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது? எல்லா வகைகளிலும் மத்திய அரசுக்கு பொருளை ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வரி பங்களிப்பில் கூட, 6 லட்சத்து 28 ஆயிரம் கோடியை தமிழ்நாடு தருகிறது. அதில் மத்திய அரசு திருப்பி கொடுப்பது என்னவோ 58,000 கோடி. 6-ல் ஒரு பங்கு கூட கிடையாது. இது எந்த விதத்தில் நியாயம்...?

நிர்மலா சீதாராமன்

ஆனால், உத்தப்ரபிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களுக்கு கேட்காமலேயே மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்கு தான் அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கண்டன ஆர்பாட்டங்களை நடத்துகிறார்.

'நானும் தமிழச்சி தான்' என்று கூறும் நிர்மலா சீதாராமன் நடிக்கிறார். நிதியமைச்சர் ஆன பிறகு, நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு என்ன செய்துள்ளார்? நாம் கொடுக்கும் பணத்தைக் கூட திரும்ப கொடுக்கும் யோக்கியம் மத்திய அரசுக்கு இல்லை. எந்த அளவுக்கு தமிழ்நாடு வெள்ளத்தில் பாதித்திருந்தது? சேர வேண்டிய நிதியையாவது கொடுங்கள் என்று கேட்டாலும், அவர்கள் கொடுக்கவில்லை. 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் பணம் கொடுக்கவில்லை.

இதற்கு தமிழ்நாட்டை பழி வாங்க வேண்டும் என்ற மத்திய அரசின் எண்ணமே காரணம். மேலும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் புரட்சிகரமான திட்டங்களும் காரணம். கனடாவில் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார்கள். ஐ.நா சபையில் ஸ்டாலின் பேசுபொருள் ஆகியுள்ளார். அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் புகழ் உச்சிக்கு போய் உள்ளது. இதை மோடியின் அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நடிக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில், ஆளுநர் ஆட்சியாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்ததையொட்டி, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தலைமையில் நாங்கள் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்பாட்டம் நடத்தினோம். நாங்கள் ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும், மாநில உரிமைகளை காப்பதில் மிகுந்த ஆதரவுடன் திமுக செயல்படும்" என்று பேசினார்.

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) மாணவர்... மேலும் பார்க்க

Vijay : '2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்' - விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.விஜய்கட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்யவிருந்த நிலை... மேலும் பார்க்க

”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குட... மேலும் பார்க்க

"பெரியாரை வீழ்த்தும் முயற்சி... மூக்குடைபட்டார்கள்" - முதல்வரை சந்தித்தபின் திருமாவளவன் பேட்டி

தலைமைச் செயலகத்தில் நடந்த, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சந்திரகுமார் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் தொல். திருமாவளவன். தொடர்ந்து முலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன... மேலும் பார்க்க

மாட்டு வண்டியில் வந்த எடப்பாடி; ஆப்சன்ட் ஆன செங்கோட்டையன் - அவிநாசி அத்திக்கடவு விழா துளிகள்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, "அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றியதற்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அவிநாசி அத்திக்கடவு ... மேலும் பார்க்க