செய்திகள் :

"பெரியாரை வீழ்த்தும் முயற்சி... மூக்குடைபட்டார்கள்" - முதல்வரை சந்தித்தபின் திருமாவளவன் பேட்டி

post image

தலைமைச் செயலகத்தில் நடந்த, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சந்திரகுமார் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் தொல். திருமாவளவன்.

தொடர்ந்து முலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், 4 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். ஈரோடு சட்டமன்ற தேர்தல் வெற்றி மற்றும் பெரியார் அரசியல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் திருமாவளவன்.

"ஈரோடு சட்டமன்றத்தில் அதிமுக வாக்காளர்கள் கூட அந்த அரசியலுக்கு எதிராக நின்றிருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவுபடுத்துகின்றன." எனப் பேசியுள்ளார்.

திருமாவளவன்

தொடர்ந்து, "ஈரோட்டு சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்றுள்ள வாக்குகள், இந்த மண் பெரியாரின் சமூகநீதி அரசியலுக்கான தேசம் என்பதை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

பெரியார் தமிழ் மக்களுக்குக்கு எதிரானவர் எனத் திருபு வாதம் செய்ய சங் பரிவார்கள் முயற்சி செய்தனர். இது அவர்கள் நீண்டகாலமாக செய்துவரும் முயற்சியாகும். பெரியார் என்ற அடையாளத்தை சிதைத்துவிட்டால், திராவிட அரசியலின் வேரை வெட்டி வீழ்த்த முடியும் என சங்கபரிவார் அமைப்புகள் பெரியார் காலத்திலிருந்தே முயற்சித்து வருகின்றனர். அவ்வப்போது தமிழ் சமூகத்திலிருந்தே அவர்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்து, பெரியாருக்கு எதிராக நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு சந்தர்பத்திலும் அவர்கள் மூக்குடைபட்டு, அவமானப்பட்டார்கள் தவிர அவர்களால் பெரியாரை வெல்லமுடியவில்லை. பெரியார் பேசிய அரசியல் பெரியாருக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வேரூன்றியது என்பதை சங் பரிவார்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.

பண்டிதர் அயோத்திதாசர், இரட்டை மலை சீனிவாசன் ஆகியோர் காலத்தில் இருந்தே ஆரியத்துக்கு எதிரான திராவிட அரசியல் வலுவாக பேசப்பட்டிருக்கிறது. அந்த அரசியலின் தொடர்ச்சியாகத்தான் பெரியார் இந்த மண்ணில் விஸ்வரூபம் எடுத்தார்.

பெரியாரை வீழ்த்த அவர்கள் எடுத்த சதி முயற்சிகள் ஒவ்வொருமுறையும் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலிலும் அந்த சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

பெரியார்

"ஆண்ட கட்சி, வலுவான எதிர்கட்சி அதிமுக அந்த தொகுதியில் போட்டியிடாமல் பின் வாங்கியதற்கு சங் பரிவார்களின் சூழ்ச்சிதான் காரணம் என்பதை அறிய முடிந்தது. அவர்கள் எல்லோரும் கூட்டு சேர்ந்து திமுக-வா, திமுகவை எதிர்த்து நின்ற அரசியல் கட்சியா (நாம் தமிழர்) என்ற விவாதத்தை நகர்த்தினார்கள். ஆனால் அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

அவர்கள் செய்த மறைமுக கூட்டணி அம்பலப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள் மூக்குடைபட்டிருக்கிறார்கள். ஈரோடு சட்டமன்றத்தில் அதிமுக வாக்காளர்கள் கூட அந்த அரசியலுக்கு எதிராக நின்றிருக்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவுபடுத்துகின்றன.

அதிமுக-வுக்கும் பாஜக-வுக்கும் ஈரோடு மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. பெரியாரின் அரசியலை இந்த மண்ணில் எவராலும் அசைத்துப்பார்க்க முடியாது. அது சமூக நீதி அரசியல், புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல், பண்டிதர் அயோத்திதாசரின் அரசியல். ஆரியத்துக்கு, சங் பரிவார்களின் கருத்தியலுக்கு நேர் எதிரான அரசியல் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்." என்றார்.

மேலும் முதலமைச்சரிடம் வைத்த நான்கு முக்கிய கோரிக்கைகளையும் விளக்கினார்.

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க

Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்லுபடியாகுமா?

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளைச் செய்து வருகிறார். அதில் ஒன்று மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது. கடந்த மாதமே செய்தியாளர் சந்திப்... மேலும் பார்க்க

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) மாணவர்... மேலும் பார்க்க

Vijay : '2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்' - விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.விஜய்கட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்யவிருந்த நிலை... மேலும் பார்க்க

”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குட... மேலும் பார்க்க