செய்திகள் :

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்

post image

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேலும், இடித்து தரைமட்டமாக்க வேண்டிய பகுதியாக காஸா இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் டிரம்ப்பை சந்தித்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.

மேலும், போா்க்களத்திலிருந்து வெடிக்காத ஆபத்தான குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும், இடிந்த கட்டடங்களையும் அகற்றி, அப்பகுதியின் மறுகட்டமைப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் எனத் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

இதையும் படிக்க : இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

இந்த நிலையில், காஸா குறித்து மீண்டும் டிரம்ப் பேசிய கருத்துகளை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் பவுலில் கலந்து கொள்வதற்காக நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்துக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது, செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“காஸாவை ’பெரிய ரியல் எஸ்டேட்’ தளமாக கருத வேண்டும். மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகள் அதன் மறுவடிவமைப்பைக் கையாளும் பணியை மேற்கொள்ளலாம்.

ஆனால், காஸாவை எங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் ஹமாஸ் படையினர் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள உறுதியாக உள்ளோம். காஸாவில் தற்போது இடிக்கப்பட வேண்டிய பகுதிகள் மட்டுமே உள்ளன, வேறெதுவும் இல்லை.

எங்கள் திட்டங்கள் பாலஸ்தீன பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அளவில் எதிர்வலைகளை தூண்டினாலும், இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் காஸாவுக்கு திரும்புவதை விரும்ப மாட்டார்கள்.

அவர்கள் காஸாவுக்கு திரும்புவது பற்றி பேசுவதற்கு ஒரே காரணம் மாற்று இடம் இல்லை என்பதால்தான். ஆனால், நாம் அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் வீட்டைக் கட்டிக் கொடுத்தல காஸாவுக்கு திரும்ப விரும்ப மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், டிரம்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஹமாஸ் அரசியல் குழு உறுப்பினர் இஸ்ஸாத் அல் - ரிஷேக் வெளியிட்ட செய்தியில்,

“காஸா வாங்கவும் விற்பனை செய்வதற்குமான சொத்து கிடையாது, அது எங்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி” எனத் தெரிவித்துள்ளார்.

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்... மேலும் பார்க்க

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்க... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா். பாகிஸ்தானில் ஊழல் வழக்... மேலும் பார்க்க

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா். அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா ... மேலும் பார்க்க