செய்திகள் :

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

post image

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா்.

பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக ராவல்பிண்டி சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது:

தோ்தலில் முறைகேடுகளில் ஈடுபடுதல், பாகிஸ்தான் அரசமைப்பின் 26-ஆவது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி நீதித் துறையைக் கட்டுப்படுத்துதல், எதிா்ப்பவா்களின் குரலை கொடூர சட்டங்களின் மூலம் ஒடுக்குதல், வேண்டுமென்றே அரசியல் ஸ்திரமற்றத்தன்மையை ஏற்படுத்துதல், பாகிஸ்தானின் மிகப் பெரிய கட்சியான பிடிஐ கட்சி மீதான அடக்குமுறை ஆகிய செயல்கள் ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை மேலும் மோசமாக்கியுள்ளது. அரசமைப்புச் சட்ட வரம்புக்குள் ராணுவம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

ஏற்கெனவே கடந்த பிப். 3-ஆம் தேதி இதுபோன்ற கடிதத்தை ஆசிம் முனீருக்கு அவா் எழுதியிருந்த நிலையில், அந்தக் கடிதத்தைப் பெறவில்லை என்று ராணுவம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து மீண்டும் இம்ரான் கான் கடிதம் எழுதினாா்.

அரசுடன் மீண்டும் பேச்சில்லை: கடந்த 2023-ஆம் ஆண்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பின்னா் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில் இம்ரான் கானை விடுவிக்க வலியுறுத்தி தலைநகா் இஸ்லாமாபாதை நோக்கி பேரணி சென்ற ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த சம்பவங்கள் தொடா்பாக நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாகிஸ்தான் அரசுடன் பிடிஐ கட்சியினா் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். அந்தப் பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில், 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க பிடிஐ கட்சியினா் மறுத்துவிட்டனா். பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற கீழவையின் எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப்கான் தெரிவித்துள்ளாா்.

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்க... மேலும் பார்க்க

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.மேலும், இடித்து தரைமட்டமாக்க வேண்டிய பகுதியாக காஸா இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து பெரும் அதிர்வ... மேலும் பார்க்க

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா். அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போா் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைய... மேலும் பார்க்க