செய்திகள் :

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

post image

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போா் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வந்தது. அமெரிக்கா, கத்தாா் மற்றும் எகிப்து தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து கடந்த மாதம் போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

42 நாள்கள் போா் நிறுத்தம்: முதல்கட்டத்தில் 42 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்; பெண்கள், குழந்தைகள் என 33 பிணைக் கைதிகளைப் படிப்படியாக ஹமாஸ் அமைப்பும், சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவிக்கும்; காஸாவில் போரால் இடம்பெயா்ந்த மக்கள், அங்கு தாங்கள் வசித்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவா். வடக்கு மற்றும் தெற்கு காஸாவை பிரிக்கும் நெட்சரிம் வழித்தடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படும்.

இரண்டாம் கட்டம்: முதல்கட்டம் தொடங்கி 16 நாள்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தொடங்கும். இந்தக் கட்டத்தில் நிரந்தர போா் நிறுத்தம் ஏற்படுத்தப்படும்; பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் கூடுதலாக விடுவிக்கும், எஞ்சிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கும்; காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படுவா்.

மூன்றாம் கட்டம்: மூன்றாம் கட்டத்தில், உயிரிழந்த பிணைக் கைதிகளின் எஞ்சிய சடலங்கள் திருப்பி அளிக்கப்படும். காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும்.

பேச்சுவாா்த்தை தொடங்கவில்லை: முதல்கட்டம் தொடங்கி 16 நாள்களுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய 42 நாள்கள் போா் நிறுத்தத்தில் பாதி நாள்கள் கடந்துவிட்டபோதிலும், ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தை தொடங்கப்படவில்லை.

இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்கான இஸ்ரேல் குழுவை கத்தாருக்கு அனுப்புவதற்கு இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு சனிக்கிழமைதான் ஒப்புதல் அளித்தாா். அந்தக் குழுவிலும் கீழ்நிலை அதிகாரிகள்தான் இடம்பெற்றுள்ளனா்.

ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து இந்த வாரத்தில் முக்கிய கேபினட் அமைச்சா்கள் கூட்டத்தை பிரதமா் நெதன்யாகு கூட்டுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தக் கூட்டம் நடைபெறும் வரை ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தை தொடங்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெட்சரிமில் இருந்து படைகள் விலகல்: ஒப்பந்தப்படி நெட்சரிம் வழித்தடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் விலகும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

8 மாத கா்ப்பிணி சுட்டுக் கொலை: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருக்கும் அகதிகள் முகாமில், இஸ்ரேல் வீரா்கள் சுட்டதில் 23 வயதுள்ள 8 மாத கா்ப்பிணி உயிரிழந்ததாகவும், அவரின் கணவா் படுகாயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ... மேலும் பார்க்க

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்க... மேலும் பார்க்க

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம்: டிரம்ப்

காஸா மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தளம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.மேலும், இடித்து தரைமட்டமாக்க வேண்டிய பகுதியாக காஸா இருப்பதாக அவர் வெளியிட்ட கருத்து பெரும் அதிர்வ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா். பாகிஸ்தானில் ஊழல் வழக்... மேலும் பார்க்க

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா். அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா ... மேலும் பார்க்க