செய்திகள் :

39 வயதில் ரூ.1.60 கோடி பென்சனுடன் பணி ஓய்வு பெற்ற இளம் பொறியாளர்..!

post image

பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணியாற்றி வந்த 39 வயதான கணினி தொழில்நுட்பம் சார்ந்த பொறியாளர் ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பணி ஓய்வுக்குப்பின் வழங்கப்படுகிற வருடாந்திர ஓய்வுத் தொகையோ ரூ. 1.5 கோடியாகும்..!

அமேசான், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், இண்டெல் நிறுவனங்களில் பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஜமால் ராபின்சன் ‘அமேசான்’ நிறுவனத்தில் தனது 16 வயதில் ஜெனிட்டர் பொறுப்பில் இணைந்த ஜமால் ராபின்சன், தான் 45 வயது பூர்த்தியடையும்போது பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென்பதை தன்னுடைய 17-ஆம் வயதிலேயே தீர்மானித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தன் இலக்குகளை 6 ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்ட காரணத்தால், கடந்தாண்டு தன்னுடைய 39-ஆம் வயதில் பணி ஓய்வை அறிவித்துவிட்டார்.

அதுவும், தான் ஆண்டு வருமானமாக ரூ. 9.63 கோடிக்கும் மேல் பெறும் காலத்தில், வருமானத்தை பொருட்படுத்தாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைப்பதே முக்கியமென நினைத்து இந்த முடிவை தைரியமாக எடுத்துள்ளார். அதேவேளையில், பணத்தின் மதிப்பு தனக்கு நன்றாகவே தெரியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Amazon

ஒருகாலத்தில், தன்னுடைய நண்பர்கள் சிலர் 200 டாலர் மதிப்பிலான ஷூக்கள் வாங்கி அணியும்போது, தானும் இதுபோல விலையுயர்ந்தவற்றை வாங்கி அணிய எத்தனை மணி நேரம் வேலை பார்க்க வேண்டுமோ? என்று எண்ணி ஆதங்கப்பட்ட நாள்களையும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்துள்ள ராபின்சன், இவற்றையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, தான் ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வு பெறும்போதும் தன்னுடைய சேமிப்பையும் அதற்குத் தகுந்தாற்போல அதிகரித்துக்கொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், சம்பள உயர்வு கிடைக்கும்போதெல்லாம் தன் சம்பளத் தொகையிலிருந்து சேமிப்புக்கென ஒதுக்கும் தொகையையும் 30 சதவிகிதத்திலிருந்து 50 சத்விகிதம், அதன்பின், 80 சத்விகிதம், பின் சம்பளத்திலிருந்து 90 சதவிகிதம் தொகையை சேமிப்புக்கென ஒதுக்கிவிட்டதால், இப்போது தன்னால் முன்கூட்டியே பணி ஓய்வு பெற முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு பணி ஓய்வு பெற்ற ராபின்சன், வங்கிக்கணக்கில் ரூ. 30.65 கோடிக்கும் மேல் சேமித்து வைத்துள்ளார். தற்போது துபையில் வசித்து வரும் ராபின்சனுக்கு ஓய்வுத் தொகையாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ. 1.62 கோடி கிடைக்கிறது.

தன்னுடைய முதலீடுகளை திட்டமிட்டு வகுத்துள்ளதால், பணி ஓய்வுக்குப்பின்னும், ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்ட முடியுமென நம்பிக்கையுடன் சொல்லி வியக்க வைக்கிறார் இந்த ராபின்சன்..!

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் உயிரிழப்பு

கௌதமாலா: மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் உயிரிழந்னா்.தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேர... மேலும் பார்க்க

இலங்கை: குரங்கால் ஏற்பட்ட மின்தடை!

தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி

வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.இது ... மேலும் பார்க்க

கௌதமாலா: சாலை விபத்தில் 51 போ் பலி!

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 போ் பலியாகினா். தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியில் பாலத்தின்மீது திங்கள்கிழமை அந்தப் பேருந்து சென... மேலும் பார்க்க

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய அமெரிக்க தேசமான குவாடெமாலாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாடெமாலா சிட்... மேலும் பார்க்க

நோக்கியா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்! என்ன காரணம்?

நோக்கியா நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பெக்கா லண்ட்மார்க் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை(பிப். 10) அறிவித்துள்ளார்.பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்க... மேலும் பார்க்க