செய்திகள் :

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

post image

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை எனவும் விமர்சித்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு பழங்குடி சமூகத்தினரிடையே நீடித்துவந்த மோதல் போக்கிற்கு தீர்வு காணத் தவறியதால், முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை நேற்று (பிப். 9) ராஜிநாமா செய்தார்.

மணிப்பூர் மக்களின் நலன் கருதி பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கெளரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

மணிப்பூர் மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்யவில்லை. ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜக அவரை ராஜிநாமா செய்யவைத்துள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடந்தால், அதில் பாஜக ஆட்சி கவிழும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா கணித்துவிட்டார். மணிப்பூரில் மீண்டும் இயல்பு நிலையைக் கொண்டுவர பாஜகவிடம் உரிய திட்டம் உள்ளதாகத் தெரியவில்லை. மக்கள் நலனுக்கு மேலாக கட்சி நலனை முன்வைப்பது, பாஜகவின் டிஎன்ஏ-விலேயே உள்ளது என விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியும் உச்சநீதிமன்றமும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடு... மேலும் பார்க்க

ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்

புது தில்லி: நாட்டில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக... மேலும் பார்க்க

டிரம்பின் முதல் பதவிக் காலத்தைபோல் நட்புறவு மேம்படும்: மோடி நம்பிக்கை

புது தில்லி: ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் முந்தைய பதவிக் காலத்தில் இரு நாடுகளிடையே நீடித்த நட்புறவை அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மேலும் வலுப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என ... மேலும் பார்க்க